அன்பு
அன்பின் மேல் மட்டுமே
அமரும் அந்தக் காகம்
வெளியில் விழுந்துகிடக்கும்
வெளிச்சத்தின்மேல் அமர்கிறது
பனியில் நனைந்துவிட்ட
பாறையின்மேல் அமர்கிறது
கனிகள் இழந்துவிட்ட
கிளையின்மேல் அமர்கிறது
வலிகள் கனிந்துவிட்ட
மனத்தின்மேல் அமர்கிறது
காயடிக்கப்பட்ட மாட்டின்
கொம்பின்மேல் அமர்கிறது
திருநங்கையின் காயப்போட்ட
உள்ளாடையின் மேல் அமர்கிறது
தனித்தே வாழ்கின்ற
கணத்தின் மேல் அமர்கிறது
அன்பின் மேல் மட்டுமே
அமரும் அந்தக் காகம்
அன்பின் உடைந்துகொண்டிருக்கும்
பானையின்மேல் அமர்ந்து
கல்லைப் போட்டுக்கொண்டே இருக்கிறது
அதோ
இன்மையின் மேல்
எத்தனை அழகாக உட்கார்ந்துவ