வீடடைந்த கதை
கட்டுரை
வீடடைந்த கதை
பெருந்தேவி
மார்ச் 21 நள்ளிரவுக்குப் பிறகு தனது ஆகாய வெளியில் பறக்க எந்த வெளிநாட்டு விமானத்துக்கும் அனுமதி இல்லை’ என இந்திய அரசு அறிவித்தது. யோசிப்பதற்குக்கூட அவகாசம் இல்லை.
அவசர கதியில் போட்டது போட்டபடி இந்தியாவுக்கு வரப் புறப்பட்ட அந்த மாலை நேரத்தில் ஆல்பனி விமான நிலையத்தின் உள்ளே நுழையும் இடத்திலும், பாதுகாப்புப் பரிசோதனை செய்யும் இடத்திலும் தலா ஐந்து பேர் மாத்திரம் இருந்தார்கள். அதிலும் என் விமானத்துக்கான நுழைவாயில் இருந்த விஸ்தாரமான விமானத் தளத்தில் மொத்தமே என்னையும் சேர்த்து மூவர். அதிலொரு இளைஞர் தான் அமர