மே 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      செங்கொடி இயக்கத்தின் திசைவழி
      ‘மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனையே எழுத்து’
      பெருமாள்முருகன் படைப்புகளின் பயணம்
      அவர்கள் கவனக்குறைவானவர்கள்
      நுஃமானை விளங்கிக்கொள்ளுதல்
      கவராயம் கவிப்பொருள் ஆனதென்னே!
      வரலாற்றில் ஒளிரும் சுடர்
    • கதை
      தாத்தா
      மறுபக்கம்
    • மதிப்புரைகள்
      இரு பெரும் பரிமாணங்கள்
    • நுண்கதைகள்
      சுஜித் லெனின் நுண்கதைகள்
    • கற்றனைத்தூறும்-6
      வாழிய நிலனே!
    • மீள்பதிவு
      பண்பாட்டு வேர்களைத் தேடுதல்
    • பதிவு
      நெகிழவைத்த அறுபது
    • திரை
      தலித் சினிமா: நீளும் தூரத்தில் நீல வெளிச்சங்கள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      குழிக்குள் தள்ளப்பட்ட அகழாய்வு நெறி
    • அஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்திரபாண்டியன் (1941&2025)
      தமிழ் காமிக்ஸின் நாயகன்
    • மதிப்புரை
      இகவெளியும் பரவெளியும்
      அரங்கின் சலனங்கள்
    • அஞ்சலி: மரியோ வர்கஸ் யோசா (1936&2025)
      காலத்தின் கதைசொல்லி
    • கவிதைகள்
      விநோத் குமார் சுக்ல
    • தலையங்கம்
      சமச்சீரான கடவுள் அருள்
    • அஞ்சலி: கணநாத் ஒபயசேகர (1930-2025)
      பௌத்த மனசாட்சியை மீட்க முனைந்தவர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2025 அஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்திரபாண்டியன் (1941&2025) தமிழ் காமிக்ஸின் நாயகன்

தமிழ் காமிக்ஸின் நாயகன்

அஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்திரபாண்டியன் (1941&2025)
எஸ். ராமகிருஷ்ணன்

எழுத்தின் மீதான எனது முதல் ஆசைகளை உருவாக்கியவை காமிக்ஸ் புத்தகங்களே. இன்றைக்கும் இரும்புக்கை மாயாவியை விரும்பிப் படிக்கிறேன். அதனை வெளியிட்டவர், நிறுவனர் சௌந்திர பாண்டியன் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைப் பகிர்ந்துகொள்கிறேன்.

சௌந்திரபாண்டியனை மூன்று முறை சிவகாசியில் சந்தித்து உரையாடியிருக்கிறேன். அவரை நேர்காணல் செய்து குங்குமம் இதழில் வெளியிட்டுமிருக்கிறேன். அவர் ‘இரும்புக்கை மாயாவி’யை முதன்முறையாக எங்கே படித்தார், எப்படி அதன் உரிமையை வாங்கினார், தமிழ் மொழிபெயர்ப்பின் சவால்கள் என்ன என்பது குறித்தும் உரையாடியிருக்கிறேன். அந்த நினைவுகள் மனதில் பசுமை மாறாமல் இருக்கின்றன.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஈஸ்ட் லான்சிங் வளாகத்தினுள் காமிக்ஸ் புத்தகங்களுக்கெனத் தனியான ஆவணக் காப்பகம் உள்ளது. நண்பரும் பேராசிரியருமான சொர்ணவேல் என்னை அங்கே அழைத்துச் சென்றார்.

உலகின் தலைசிறந்த காமிக்ஸ் புத்தகங்களின் மூலப்பிரதிகள், ஒரிஜினல் சித்திரங்கள், பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ள காமிக்ஸ் புத்தகங்களின் சிறப்புப் பதிப்புகளைச் சேகரித்துப் பாதுகாத்துவருகிறார்கள். காமிக்ஸ் குறித்து விரிவாக ஆய்வு செய்துவருகிறார்கள்.

அங்கே தமிழ் காமிக்ஸ் புத்தகம் ஏதாவது இருக்கிறதா எனத் தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுடன் தொடர்புகொண்டு சிவகாசியிலிருந்து வெளியாகும் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ்பற்றிச் சொன்னதும் அடுத்த சில மாதங்களில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி ஆவணப்படுத்திவிட்டார்கள். அவர்களும் இரும்புக்கை மாயாவி காமிக்ஸை வியந்து பாராட்டினார்கள்.

1962இல் லண்டனில் ஃப்ளீட்வே (Fleetway) பதிப்பகத்தின் வழியே அறிமுகமாகிப் பிரபலம் அடைந்த ‘தி ஸ்டீல் க்ளா’ (‘The Steel Claw’) தான் இரும்புக்கை மாயாவியாகத் தமிழில் உருமாற்றம் பெற்றார். ப்ளீட்அவே பதிப்பகம் காமிக்ஸ் பதிப்புத் துறையில் முன்னோடி நிறுவனம். அவர்கள் சிறார்களுக்காக இதழ்கள், சித்திரக் கதைகள் வெளியிடுவதில் முன்னோடியானவர்கள்.

முத்து காமிக்ஸ் 1971ஆம் ஆண்டு அதன் முதல் காமிக்ஸ் புத்தகத்தை வெளியிட்டது. ‘இரும்புக்கை’ மாயாவி என்ற அந்தக் காமிக்ஸ் புத்தகம் 128 பக்கம் கொண்டது. விலை 90 பைசா. காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த முதல் பதிப்பின் மதிப்பு நன்றாகத் தெரியும்.

சென்ற மாதம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆட்சியாளர் ஜெயசீலன் ஐஏஎஸ் முன்னெடுப்பில் காமிக்ஸ் நூலகம் தொடங்கப்பட்டது. அந்த விழாவிற்குச் சென்றபோது சௌந்திரபாண்டியன் உடல்நலமற்று இருப்பதாக அறிந்தேன். அவரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக சிவகாசி செல்ல இயலவில்லை.

காமிக்ஸ் நூலக விழா மேடையில் உரையாற்றும்போது சௌந்திரபாண்டியன் தமிழ் காமிக்ஸ் உலகிற்குச் செய்த பங்களிப்புகளையும் சிறப்புகளையும் எடுத்துப் பேசினேன். அரங்கமே அவரை வாழ்த்திக் கரவொலி செய்தது.

சௌந்திரபாண்டியன் மிகவும் தன்னடக்கமானவர். எதிலும் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளாதவர். அவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம். அமெரிக்கக் காமிக்ஸ் புத்தக எழுத்தாளர் ஸ்டான் லீ மார்வெல் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டுப் புகழ்பெற்றவர். அவரைக் காமிக்ஸ் உலகின் தலைமகனாகக் கொண்டாடுகிறார்கள். அதற்கு இணையானவர் சௌந்திரபாண்டியன். அவரது தொடர் செயல்பாடுகளே தமிழ் காமிக்ஸ் புத்தகங்களுக்குத் தனித்த வாசக உலகை உருவாக்கியது.

முத்துக் காமிக்ஸ் வெளியிட்ட காமிக்ஸ் புத்தகங்களை எளிய தமிழில் சுவாரஸ்யமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இரும்புக்கை மாயாவியை அழிக்க நினைக்கும் அமைப்பின் பெயர் FEAR. அதைத் தமிழில் திறம்பட அகொதீக (அழிவு கொள்ளை தீமைக் கழகம்) என்று மாற்றியது சுவாரஸ்யமானது.

இன்று நாம் கொண்டாடும் ஜேம்ஸ்பாண்ட்டின் சாகசங்கள் அத்தனையும் இரும்புக்கை மாயாவியிடமிருந்து பெற்ற உந்துதல்களே.

தமிழ் காமிக்ஸின் தலைநகரம் சிவகாசி. இன்று நமக்குக் கிடைத்துள்ள இணைய வசதியோ, தொழில்நுட்ப சாத்தியங்களோ இல்லாத காலத்தில் காமிக்ஸ் வெளியிடும் வெளிநாட்டுப் பதிப்பகங்களைத் தபால் மூலமாகவே தொடர்புகொண்டு, பல மாதங்கள் காத்திருந்து அதற்கான உரிமையை உரிய பணம் கொடுத்துப் பெற்று காமிக்ஸின் மூலச்சித்திரங்களை வரவழைத்து அதே நேர்த்தியுடன் அச்சிட்டு, குறைவான விலையில் விற்பனை செய்தது சௌந்திரபாண்டியனின் தனிப்பெரும் சாதனை. தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் மனதில் அவரது நினைவுகள் என்றும் நிலைத்து நிற்கும்.

              மின்னஞ்சல்: writerramki@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.