மே 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      செங்கொடி இயக்கத்தின் திசைவழி
      ‘மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனையே எழுத்து’
      பெருமாள்முருகன் படைப்புகளின் பயணம்
      அவர்கள் கவனக்குறைவானவர்கள்
      நுஃமானை விளங்கிக்கொள்ளுதல்
      கவராயம் கவிப்பொருள் ஆனதென்னே!
      வரலாற்றில் ஒளிரும் சுடர்
    • கதை
      தாத்தா
      மறுபக்கம்
    • மதிப்புரைகள்
      இரு பெரும் பரிமாணங்கள்
    • நுண்கதைகள்
      சுஜித் லெனின் நுண்கதைகள்
    • கற்றனைத்தூறும்-6
      வாழிய நிலனே!
    • மீள்பதிவு
      பண்பாட்டு வேர்களைத் தேடுதல்
    • பதிவு
      நெகிழவைத்த அறுபது
    • திரை
      தலித் சினிமா: நீளும் தூரத்தில் நீல வெளிச்சங்கள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      குழிக்குள் தள்ளப்பட்ட அகழாய்வு நெறி
    • அஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்திரபாண்டியன் (1941&2025)
      தமிழ் காமிக்ஸின் நாயகன்
    • மதிப்புரை
      இகவெளியும் பரவெளியும்
      அரங்கின் சலனங்கள்
    • அஞ்சலி: மரியோ வர்கஸ் யோசா (1936&2025)
      காலத்தின் கதைசொல்லி
    • கவிதைகள்
      விநோத் குமார் சுக்ல
    • தலையங்கம்
      சமச்சீரான கடவுள் அருள்
    • அஞ்சலி: கணநாத் ஒபயசேகர (1930-2025)
      பௌத்த மனசாட்சியை மீட்க முனைந்தவர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2025 பதிவு நெகிழவைத்த அறுபது

நெகிழவைத்த அறுபது

பதிவு
கிருஷ்ண பிரபு

படம்: ஜவஹர் ஜி.

எழுத்தாளரும் இதழாளரும் மொழி பெயர்ப்பாளருமான அரவிந்தனுக்கு 60 வயது நிறைவடைந்ததை யொட்டி ‘நெய்தல்’ இலக்கிய அமைப்பு ‘அரவிந்தன் 60’ நிகழ்ச்சியை நாகர்கோவிலில் கடந்த மார்ச் 22 அன்று மாலை நடத்தியது. 1989ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் நெய்தல் அமைப்பு  2006 இலிருந்து இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது,  இளம் கவிஞர்களுக்கான ராஜமார்த்தாண்டன் விருது ஆகியவற்றை வழங்கிவருகிறது. தற்போது நாகர்கோவிலில் வசித்துவரும் அரவிந்தனின் எழுத்து, ஆளுமை ஆகியவற்றை நினைவுகூரும் விதமாக இந்த நிகழ்ச்சியை நெய்தல் நடத்தியது.

அரவிந்தனின் சிறுகதை ஒன்றைச் சொற்சித்திர மாக்கி நிகழ்வைத் தொடங்கிவைத்தார் சீதா பாரதி. கதையை அவர் சொன்னவிதம் வாசிப்புக்கு இணையான அனுபவத்தைக் கொடுத்தது. முன்பே வாசித்தவர்களும்கூடக் கதையைக் கேட்டது புதிய அனுபவமாக இருந்ததாகச் சொன்னார்கள்.

தொடர்ந்து, ஓவியரும் எழுத்தாளருமான சந்தோஷ் நாராயணன் பேசினார். அரவிந்தனின் தலைமைப் பண்பு, ஆளுமைத் திறன், சக மனிதர்கள்மீதான அக்கறைபற்றிய பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். காலச்சுவடில் வடிவமைப்பாளராக வேலைக்குச் சேர்ந்த தனக்குள் இருந்த எழுத்துத் திறமையை அரவிந்தன் அடையாளம் கண்டு எழுத ஊக்குவித்ததை நினைவுகூர்ந்தார்.  அரவிந்தனின் உணவு ருசி, இசையார்வம் ஆகியவற்றையும் தன்னுடைய சுருக்கமான பேச்சில் தொட்டுக்காட்டினார் சந்தோஷ்.

காந்தியச் சிந்தனைகளில் ஆழ்ந்த  ஈடுபாடுகொண்ட எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியம், இதழியல் சார்ந்து அரவிந்தனின் ஆசிரியத்துவம்பற்றிய வியப்புகளைப் பகிர்ந்துகொண்டார். எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை அவர் வளர்த்தெடுக்கும் விதத்தைப் பற்றியும் பேசினார். அரவிந்தனுடனான தனிப்பட்ட நட்பின் தருணங்கள், உரையாடல்களில் வெளிப்படும் வீச்சு ஆகியவற்றையும் சுவைபடப் பகிர்ந்துகொண்டார்.

காலச்சுவடு இதழ் சார்ந்த பணிகள், பதிப்பகம் தொடர்பான நூலாக்கப் பணிகளில் அரவிந்தன் கூறும் நுணுக்கமான கருத்துகளும், சக ஊழியர்களிடம் வெளிப்படுத்தும் அக்கறையும் என எழுத்தாளர் களந்தை பீர் முகம்மது தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அறைத் தோழராக அவரின் அன்றாட வாழ்வியல் ஒழுக்கமும், தொடர் பயிற்சியும் எழுத்து வாழ்க்கையில் எவ்வளவு கடினம் என்பதையும் முன்வைத்தார்.

எழுத்தாளர் ஜே. பி. சாணக்யா, இலக்கிய ஈடுபாட்டிலும் சினிமாத் துறையிலும் தனது ஆரம்பக் காலம் தொட்டே எல்லாச் சூழ்நிலையிலும் அரவிந்தன் உடன் இருந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார். எழுத்தில் ஆர்வம் கொண்டு இயங்க முனையும் தன்னைப் போன்ற படைப்பாளிகளுக்கு அரவிந்தன் போன்றவர்கள் தரும் ஆதரவும் ஊக்கமும் எவ்வளவு முக்கியமானவை என்பதை விவரித்தார். தனிப்பட்ட நட்பின் முக்கியமான தருணங்களை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். அரவிந்தனின் இலக்கியப் படைப்புகள், அதில் வெளிப்படும் நுட்பங்கள் குறித்தும் ஆழமாகப் பேசினார்.

கவிஞர் சுகுமாரன் தன்னுடைய சுருக்கமான உரையில், இலக்கியப் பங்களிப்புகள், இதழியல் பணிகள், மொழியாக்கம், பதிப்பகச் செயல்பாடுகள் என அரவிந்தனின் எழுத்து சார்ந்த  தளங்களைத்  தொட்டுப் பேசினார்.

மிகச் சுருக்கமாக அமைந்த அரவிந்தனின் ஏற்புரை நன்றியறிதலின் பதிவாக அமைந்தது. தயாளனும் சீதா பாரதியும் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்கள். நெய்தல் அமைப்பின் நிறுவனரான ‘நெய்தல்’ கிருஷ்ணனின் ஒருங்கிணைப்புத் திறன் நிகழ்ச்சி நடந்த விதத்தில் வெளிப்பட்டது. ஆய்வறிஞர் அ.கா. பெருமாள், மொழிபெயர்ப்பாளர் பெர்னார்ட் சந்திரா, எழுத்தாளர்கள் என்.டி. ராஜ்குமார், நட. சிவகுமார், மலர்வதி உட்படப் பலரும் கலந்துகொண்ட அன்றைய  மாலை நேர நிகழ்வு சுவையான இரவு உணவுடன் நிறைவடைந்தது.  

        மின்னஞ்சல்: enathu.payanam@gmail.com

 

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.