மே 2025
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      செங்கொடி இயக்கத்தின் திசைவழி
      ‘மேம்பட்ட மனிதனாவதற்கான பிரார்த்தனையே எழுத்து’
      பெருமாள்முருகன் படைப்புகளின் பயணம்
      அவர்கள் கவனக்குறைவானவர்கள்
      நுஃமானை விளங்கிக்கொள்ளுதல்
      கவராயம் கவிப்பொருள் ஆனதென்னே!
      வரலாற்றில் ஒளிரும் சுடர்
    • கதை
      தாத்தா
      மறுபக்கம்
    • மதிப்புரைகள்
      இரு பெரும் பரிமாணங்கள்
    • நுண்கதைகள்
      சுஜித் லெனின் நுண்கதைகள்
    • கற்றனைத்தூறும்-6
      வாழிய நிலனே!
    • மீள்பதிவு
      பண்பாட்டு வேர்களைத் தேடுதல்
    • பதிவு
      நெகிழவைத்த அறுபது
    • திரை
      தலித் சினிமா: நீளும் தூரத்தில் நீல வெளிச்சங்கள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      குழிக்குள் தள்ளப்பட்ட அகழாய்வு நெறி
    • அஞ்சலி: ‘முத்து காமிக்ஸ்’ சௌந்திரபாண்டியன் (1941&2025)
      தமிழ் காமிக்ஸின் நாயகன்
    • மதிப்புரை
      இகவெளியும் பரவெளியும்
      அரங்கின் சலனங்கள்
    • அஞ்சலி: மரியோ வர்கஸ் யோசா (1936&2025)
      காலத்தின் கதைசொல்லி
    • கவிதைகள்
      விநோத் குமார் சுக்ல
    • தலையங்கம்
      சமச்சீரான கடவுள் அருள்
    • அஞ்சலி: கணநாத் ஒபயசேகர (1930-2025)
      பௌத்த மனசாட்சியை மீட்க முனைந்தவர்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2025 மதிப்புரை அரங்கின் சலனங்கள்

அரங்கின் சலனங்கள்

மதிப்புரை
வெளி ரங்கராஜன்

 

பாலேந்திராவின் 
அரங்கக் கட்டுரைகள்
பாலேந்திரா

வெளியீடு: 
குமரன் புத்தக இல்லம்
இல.14, அண்ணா 2ஆம் தெரு,
தேரோடும் வீதி, திருவேற்காடு,
சென்னை - 600 077
பக். 276 ரூ. 350

இலங்கையின் பிரதான நாடகக் கலைஞரும், தமிழ் அவைக்காற்றுக் கழகத்தின் நிறுவனரும், இலங்கை யிலும் புலம்பெயர் நாடுகளிலும் 60க்கும் மேற்பட்ட தமிழ் நாடகங்களை அரங்கேற்றித் தமிழ் நவீன நாடக இயக்கத்துக்குப் புதிய பார்வை களையும் பரிமாணங்களையும் அளித்து வருபவருமான பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ் நவீன நாடகச் செயல்பாடுகளின் பின்புலத்தில் அதன்  உள்ளார்ந்த பிரச்சினைகள், சவால்கள் குறித்து ஆழ்ந்த கவனத்தை முன்னெடுக்கிறது. முக்கியமாக இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாம் உண்மையில் இயல்இசையின் சங்கமமான நாடகத்துக்குக் கொடுக்கும் இடம் என்ன என்றும், தமிழில் உலகத்தரமான நாடகங்கள் ஏன் உருவாக்கப்படவில்லை என்றும் காத்திரமான பல கேள்விகளை முன்வைக்கிறார் ஆசிரியர். இலங்கைச் சூழலை முன்வைத்து இக்கேள்விகளை எழுப்பினாலும் தமிழ்நாட்டுச் சூழலுக்கும் இக்கேள்விகள் மிகவும் பொருந்தமுடையவை.

ஆரோக்கியமான நாடகச்சூழல் உருவாக முதலில் நல்ல நாடகங்கள் உருவாக வேண்டும். அடுத்து அவை மேடையேற்றப்படுவதற்கான சூழல் உருவாகவேண்டும். நாடகக் கலை முறைமைகள், கலை நுட்பங்கள், நாடக வரலாறு, உலக நாடக வளம் ஆகியவை குறித்த அறிவும் பயிற்சியும் உள்ள குழுக்களின் தேவைகளுடன் புதிய நாடகரசனைப் பயிற்சியை அளிக்கக்கூடிய வலுவான மேடையேற்றங்களின் அவசியத்தையும் இத்தொகுப்பில் பல்வேறு இடங்களில் பாலேந்திரா வலியுறுத்துகிறார். அத்துடன் நாடகம் நிகழ்த்துவோரும் இடைவெளியின்றி பார்வையாளர்களை உடன் அழைத்துச்செல்லக்கூடிய மனநிலையைப் பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும். இந்த நிகழ்த்திக் காட்டுதலென்பது சரியான கருத்துப் பரிமாற்றத்துக்கு வழி அமைப்பதாக இருக்க வேண்டுமானால் வார்த்தைகளால் விளக்க முடியாத பல விஷயங்களை மேடையில் நடிகர்கள் நிகழ்த்துகிற படிமங்கள், கோலங்கள், சலனங்கள், செயல்பாடுகள் ஆகிய மேடை மொழி மூலம் சாத்தியப்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் தொகுப்பெங்கும் விரவிக் கிடக்கின்றன.

முக்கியமாக வசனங்களை அள்ளித் தெளிப்பதைக் கைவிட்டுச் சொற்கள் காட்சிகளுடன் இணைந்து பாத்திரங்களின் உணர்ச்சிகள், பாவனைகள் மூலம் வெளிப்பட்டு இவை அனைத்தும் ஓர் இசை ஒழுங்கில் அமையும் கட்டுப்பாடான  சூழலே நவீன நாடக அமைப்பு என வரையறுக்கப்படுகிறது. தொலைக்காட்சி நாடகங்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் ஆகிய ஒவ்வொரு வடிவமும் தனித்தன்மைகள் கொண்டிருப்பதை உணர்ந்து மேடை மொழியையும் சினிமா மொழியையும் வேறுபடுத்திப்பார்க்க வேண்டுகிறார். நல்ல நாடகங்களைத் திரும்பத் திரும்ப மேடையேற்றுவதற்கு உகந்ததாகப் போதிய நாடகப் பிரதிகளின் அவசியத்தை வலியுறுத்தி அதற்காக ஒரு தொடர்ச்சியான நாடக இயக்கமும் நாடகப் பயிற்சிக்கூடங்களின் தேவையும் அவசியம் என்கிறார். அதே சமயம் மொழிபெயர்ப்பு நாடகங்களின் அவசியத்தைக் குறைத்து மதிப்பிடுவது தவறானது, அயனெஸ்கோ, செகாவ், பிரெக்ட் போன்ற உலக நாடக மேதைகளின் பங்களிப்புகளை அங்கீகரிக்க  வேண்டும். நம்முடைய மொழிக்கும் கலாச்சார வளர்ச்சிக்கும் மொழிபெயர்ப்பு நாடகங்கள் அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார். தன்னுடைய நாடக நிகழ்வுகளில் அறிமுகப்படுத்திய இந்திய நாடகாசிரியர்களான மோகன் ராகேஷ், பாதல் சர்க்கார், கிரீஷ் கர்னாட், இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி  ஆகியோரின் நாடகப் பங்களிப்புகளை நினைகூர்ந்து கெளரவிக்கிறார்.

தன்னுடைய நாடகக் குழுவான தமிழ் அவைக்காற்றுக் கழக அனுபவங்களின் பின்புலத்தில் புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தமிழ் அரங்கச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்கிறார். அவைக்காற்றுக் கழகத்தின் நாடக நிகழ்வுகள் மூலம் உலகத் தமிழர்களுக்குக் கிடைத்த காத்திரமான நாடக அறிமுகத்தை நினைவுகூர்கிறார். முக்கியமாக லோர்க்காவின் ஸ்பானிய நாடகம் ‘பாலை வீடு’, பிரெக்டின் ‘யுகதர்மம்’, மோகன் ராகேஷின் ‘அரையும் குறையும்’, கிரீஷ் கர்னாடின் ‘துக்ளக்’, பாதல் சர்க்காரின் ‘ஏவம் இந்திரஜித்’, இந்திரா பார்த்தசாரதியின்  ‘மழை’, அம்பையின் ‘ஆற்றைக் கடத்தல்’ ஆகிய நாடகங்கள் மூலம் அவைக்காற்றுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு நாடகச் சலனங்களை இத்தொகுப்பில் குறிப்பிட்டுச் செல்கிறார்.

உலக நாடக  அரங்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு நாடகச் சலனங்களை நாம் உள்வாங்கி உரிய வகையில் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை பாலேந்திராவின் இத்தொகுப்பு வலியுறுத்திச் செல்கிறது.

   மின்னஞ்சல்: velirangarajan2003@yahoo.co.in

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.