முத்தம்
கதை
முத்தம்
பா. வெங்கடேசன்
ஒரேயொருமுறை நான் உன் உதடுகளை முத்தமிட என்னை அனுமதிப்பாயா என்று கேட்டார் அவர். அதைக் கேட்டதும் பாம்பு என்று அவர் உச்சரித்துவிட்டதைப்போல தலையோடு காலாக அவள் நடுங்கிப்போய்விட்டாள். மிகமிக மெலிதான, கிட்டத்தட்ட மூச்சுவிடுவதற்கு இணையான ஒலியளவையில்தான் அவர் சொன்னாரென்றபோதிலும் அது அவள் காதுகளில் ஒரு துப்பாக்கிக் குண்டைப்போல வெடித்தது. அவள் தான் மயங்கி விழுந்துவிடப்போகிறோமென்றும் நினைத்துப் பயந்துவிட்டாள். பதற்றத்துடன் திரும்பிப் படுக்கையறையைப் பார்த்தாள். அவள் கணவன் அந்த மிகப்பெரிய ஒலி வெடிப்பிற்குப் பின்னும் ஒரு சிறு புரளல்கூட இன்றித் தூங்கிக்கொண்டுதான் இருந்தான். அது அந்த நேரத்தில் அவளுக்குப்