கற்றலும் மதிப்பீட்டு முறைகளும்
கட்டுரை
கற்றலும் மதிப்பீட்டு முறைகளும்
அருணா ரத்னம்
தேசியக் கல்விக்கொள்கை 2020’ கற்றல் இருக்க வேண்டும் முறை குறித்து விவரமாகவே பேசுகிறது. கொள்கையின் அடிப்படைகளாகக் கூறப்படும் பட்டியலில் தொடங்கி (ப.5 தமிழ் வடிவம்) ஆறாவதுபாகம்வரை, ஒவ்வொரு நிலையிலும் மாணவரின் முழு வளர்ச்சிக்கான கற்றலானது அனுபவங்களின் வாயிலாகவும் செயல்பாடுகள் மூலமாகவும் நிகழ வேண்டும் எனப் பலமுறை வலியுறுத்துகிறது. மாணவரது வாழ்க்கைக்கு உதவுவதாக, சிந்தனையறிவைத் தூண்டுவதாக (4.5), 21ஆம் நூற்றாண்டுக்குத் தேவையான திறன்களை வளர்ப்பதாக (4.4), அறிவியல் பாடங்களுக்கும் கலைப்பாடங்களுக்கும் உள்ள பாகுபாடுகளை மறுப்பதாக (ப. 7), மாணவரது