அக்டோபர் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      சனாதன தர்மம்: வரலாற்றுப் பார்வை
      ஆங்கில அகராதியும் அப்பழுக்கான ஆளுமைகளும்
      இசை கவிதைகள்: செவ்விலக்கிய மரபின் நவீன வடிவம்
    • கதை
      குள்ளு
      தாம்பத்தியம்
    • சிற்றிதழ்
      குன்றாத தீவிரம்
    • நினைவில் சுரா
      மானுட இயல்புகளின் ஊற்றுக்கண்கள்
    • வரைசொல்
      ஓர் அட்டைப் படத்தின் பறப்புரை
    • அஞ்சலி: ஈடித் கிராஸ்மன் (1936-2023)
      ‘என்றென்றும்’
    • சுரா கடிதங்கள்
      சுரா கடிதங்கள்
    • நூல் அறிமுகம்
      தமிழ் x வடமொழி: செவ்வியல் இருமொழிய உறவாடல்
    • திரை
      ஓப்பன்ஹைமர்: நோலனின் வெறுமை
    • மதிப்புரை
      கதை வளர்ந்த கதை
    • கவிதைகள்
      மதுக்குடுவை
      அப வாதம் அல்லது காற்றில் அசையும் தொங்கட்டான்கள்
    • தலையங்கம்
      சனாதனம்: கொள்கையும் கள வியூகமும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2023 சிற்றிதழ் குன்றாத தீவிரம்

குன்றாத தீவிரம்

சிற்றிதழ்
செந்தூரன்

கலைமுகம்

(கலை இலக்கிய, சமூக இதழ்)
75 பவள இதழ்

இலங்கை விலை
ரூ. 1200

வெளியீடு:
திருமறைக் கலாமன்றம்

238, பிரதான வீடு,
யாழ்ப்பாணம், இலங்கை
தொலைபேசி : 009421222393

யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம் சார்பில் 1990இலிருந்து வெளிவந்துகொண்டிருக்கிறது கலைமுகம் கலை, இலக்கிய, சமூக இதழ். 2010ஆம் ஆண்டில் கலைமுகத்தின் பொன்னிதழ் வெளிவந்தது. கடந்த 34 வருடங்களில் 75 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இதழை நிறுவியவர் மறைந்த மரிய சேவியர் அடிகளாவார். தற்போதைய இதழின் பொறுப்பாசிரியர் கி. செல்மர் எமில்.

பெரும்பாலும் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் எழுதப்படும் படைப்புகளுக்கான களமாக இவ்விதழ் நிலைபெற்றிருக்கிறது. அரிதாகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரும் பங்களித்திருக்கிறார். பவள இதழில் 10 சிறுகதைகள், 29 கவிஞர்களின் கவிதைகள், எஸ்.கே. விக்னேஷ்வரனின் விரிவான நேர்காணலின் ஒரு பகுதி, மொழிபெயர்ப்புச் சிறுகதை, மொழிபெயர்ப்புக் கவிதைகள், பத்தி, அஞ்சலிகள், நூல் மதிப்பீடுகள் எனக் கதம்பமாகப் பவள இதழ் வெளிவந்திருக்கிறது.

இலங்கைக் கலையிலக்கியச் சூழலில் ஓர் இதழ் தொடர்ந்து வெளிவருவதைச் சிறப்பாகவே சொல்ல வேண்டும். பவளவிழா இதழின் தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதுபோன்றே இலங்கையின் போர்ச்சூழல், இடப்பெயர்வு, சுனாமி, புயல், தொற்றுநோய், 2009 இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கோரின் சாவு, கொரோனா எனத் தொடர்ந்து இயங்க முடியாத சூழல்கள் இருந்திருப்பினும் தேக்கத்துக்குள் ஒட்டுமொத்தமாக அமிழ்ந்துவிடாமல் கலைமுகம் வெளிவந்துகொண்டிருப்பது அசாதாரணமான ஒன்றுதான். கூடவே சிற்றிதழொன்றின் தீவிரத்தன்மையையும் இழந்துவிடாது செயற்படுவதும் பிரதானமானது.

நேர்த்தியான வடிவமைப்பு, வாசிப்புக்கேற்ற எழுத்துருக்கள் போன்றவையும் இதழின் தரத்தை உறுதிசெய்யக்கூடியவை. தலையங்கத்துக்குத் தனியான எழுத்துரு, கவிதைகளுக்குத் தனி, சிறுகதைகள், கட்டுரைகளுக்குப் பொதுவான எழுத்துருக்கள் எனப் பயன்படுத்துவது இதழின் நேர்த்தியையும் தக்கவைக்கக்கூடியது. ஆனால் எடுத்தாளப்படும் மேற்கோள்களுக்குச் சாய்வெழுத்துகள், மேற்கோள்குறி என இரண்டையுமே பயன்படுத்தும்போது அதில் சீர்மை இருக்காது. நேர்த்தியுடனும் தேடலுடனும் இயங்கிக்கொண்டிருக்கும் ஆசிரியர் குழுவினர் இந்தச் சீர்மையையும் பேணுவது அவசியம். செம்மையாக்கத்தில் சற்றுக் கூடுதல் கவனமெடுத்து நீண்ட கட்டுரைகளின் கல்விப்புலப் பண்டிதத்தன்மையைத் தவிர்க்கவும் முயற்சிக்கலாம். இதழுக்கும் அதன் செயல்திறனுக்கும் இவை யாவும் கூடுதல் மதிப்பையே அளிக்கும்.

கலைஞர்கள் என்கிற அடிப்படையில் மொழி, பிரதேசம் எனப் பாகுபாடற்று அஞ்சலிகளுக்குத் தனிப் பக்கம் ஒதுக்கியிருப்பது கவனத்திற்குரியது. இறந்தவர்களது பங்களிப்புகளை வெளியிட இயலவில்லையாயினும் தனிப் பகுதியாக அவர்களது பெயர், தேதிகளுடன் வெளியிட்டிருப்பது சிறப்பானது.

தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கும் கட்டுரைகளில் இதழின் அக்கறைகளை அறிந்துகொள்ள முடிகிறது. கவிதைக் கலை குறித்துத் தீவிர விமர்சனங்கள், இலங்கை, புலம்பெயர் சிறுகதைகள் குறித்த விமர்சனப் பார்வைகள், மெய்யியல் கோட்பாட்டு விளக்கங்கள் விமர்சனங்கள், அரங்க நாடக விமர்சனங்கள், சிங்கள இலக்கியப் பார்வைகள், ஓவியக் கண்ணோட்டங்கள், மொழிபெயர்ப்புப் பார்வைகள் என இவ்விதழின் அக்கறை விரிந்த அளவில் இருப்பது இலங்கைக் கலைச்சூழலின்மீது கவனங்குவிக்க வைக்கிறது. இதழில் வெளியாகி இருக்கும் நேர்காணல்கள் கவனிப்புக்குரியவை.

கலை இலக்கியக் களங்களில் தொடர்ச் செயல்பாடு மொழியிலும் சூழலின்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதன்படி கலைமுகத்தின் செயற்பாடுகள் கவனத்திற்கும் ஊக்கத்திற்குமுரியவை.

                                                                                        - செந்தூரன்

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.