சுதந்திரப் போர் (நான்காம் பாகம்) தேய்ந்த கனவு
சுதந்திரப் போர்
(நான்காம் பாகம்)
தேய்ந்த கனவு
நாட்கள் தேய்ந்து மறைந்தன.
ரகுபதிக்கு நடமாடும் ரேடியோவாக விளங்கிய ராஜேசுவரியின் நட்பு இப்போது கிட்டவில்லை. அதனால் அவன் யந்திர ரேடியோவின் உறவில் நாட்களைக் கடத்தி வந்தான். வானொலி நிகழ்ச்சிகளில் தரங்குறைந்தவை, தரம் சிறந்தவை, என்ற பாகுபாடு பாராமல், ரேடியோவே கதி என்ற மனப்போக்கில், சதா ரேடியோவையே நெருங்கி உறவாடினான். அலை பாயும் மனத்தை அடக்க முடியாத போது கை போன போக்கில் திருகி மனம் போன போக்கில் ஒலி விசித்திரங்களை கேட்டு அனுபவிக்க அந்த ரேடியோ உதவிற்று. இத்தனைக்கும் ரகுபதியின் மனம், கட்டுக்கடங்காத மனமில்லை. உணர்ச்சிகளுக்