கமலா
கதை
கமலா
உமாதேவி
ஓவியங்கள்: மணிவண்ணன்
“டியேய் சரசு... ஓடியாடி ஓடியாடி... எங்கடி போய்ட்ட ஆடுங்கள்லாம் பால்சுந்தரமூட்டு மல்லாட்ட கொல்லியில எறங்கிட்ச்சி ஓடியாடி,” என்று உரக்கக் கத்திக்கொண்டே மல்லாட்டைக் கொல்லையில் இறங்கிப் பரக்கப்பரக்க மேய்ந்துகொண்டிருந்த பத்துப் பதினைந்து செம்மறி ஆடுகளையும் விரட்டிவிரட்டி ஓட்டினாள் கமலா. ஆடுகள் சிதறி நாலாபக்கமும் மல்லாட்டைக் கொல்லையில் ஓடின. “எஞ்சாண்ட குட்ச்ச பையன் ஆடுங்க ரெவன்னாலும் மதிக்குதுங்களா பாரு. வீரமூட்டு சப்பகாலும் நவநீதமூட்டு கோண கழுத்தும் அடங்கமாட்துங்க. ட்தேயி