அக்டோபர் 2019
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
ஜனவரி 2021
    • தலையங்கம்
      ஒன்று என்பது ஒன்று மட்டுமல்ல
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • சுரா பக்கங்கள்
      அசோகமித்திரன் - சுராவுக்கு எழுதிய கடிதங்கள்
      சென்ற தடத்தில் செல்லாத கதை
    • கதை
      தெரியாதவர்
      அரசன் அன்றே கொன்றால் லியனகே நின்று கொல்வார்
      பசி
    • மதிப்புரை
      கால்நடையாளனின் தனிவழி
    • கட்டுரை
      உயிர்பெறும் சிலைகள்
      காலனியமும் காதலும்: விறலிவிடு தூது
      காந்தி ஆதரித்த சத்தியவதியின் காதல்
      செட்டியார் மிடுக்கும் சரக்கு மிடுக்கும்: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அச்சு ஊடகங்களில் விளம்பரம்
      ஜாஃபாவைப் பார்த்தபோது...
    • கல்விப் பக்கங்கள்
      வண்ணம் பூசிய கயிறுகள்
      கறைகளைக் களைதல்
    • EPW பக்கங்கள்
      அமேசான்: பற்றி எரியும் கேள்வி
      தனிநபர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்துதல்
    • கவிதைகள்
      கவிதைகள்
      கவிதைகள்
    • சிறப்புப் பகுதி: கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு
      கரிச்சான் குஞ்சு நூற்றாண்டு 1919 - 2019
      மறைந்தும் மலரும் சிநேகிதம்
      நம்பூதிரிபாடு பட்டபாடு
      நடுப்போரில் தீவைப்பவர்
      ஒட்டாத செருப்பு
      நகரமும் புனைவும் வரலாறும்
      அடிமை விண்ணப்பம்
    • Sign In
    • Register
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 50
  • ஆண்டுச் சந்தா ரூ. 425
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500
  • காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் 2019 EPW பக்கங்கள் தனிநபர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்துதல்

தனிநபர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்துதல்

EPW பக்கங்கள்
க. திருநாவுக்கரசு

EPW பக்கங்கள்

தனிநபர்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்துதல்

 

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்திற்குக் கொண்டுவரப்படும் திருத்தம் தனிநபர் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும்.

 

சுதந்திர இந்தியாவின் வரலாற்றைக் கறைபடியச் செய்த கொடூரமான ‘தேசிய பாதுகாப்பு’ சட்டங்களை அளவுகோலாகக் கொண்டால்கூட ‘சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்தச் சட்டம் 2019’ (சநதச) தனித்து நிற்கிறது. இந்தத் திருத்தம் பற்றிய பெரும்பாலான பொது விவாதங்களும் அக்கறைகளும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967இனுடைய நோக்கங்களுக்காக ஒரு தனிநபரைத் ‘தீவிரவாதி’ என அறிவிக்க மத்திய அரசுக்குள்ள அதிகாரம் பற்றியே கவனத்தைக் குவித்தன. நேர்கொண்ட சிந்தனையுடைய எந்தவொரு குடிமகனையும் இந்தச் சட்டம்  அச்சங்கொள்ள வைக்கும்.

எந்தவொரு அமைப்பையும் ‘தீவிரவாத அமைப்பாக’ முத்திரை குத்த மத்திய அரசை அனுமதிப்பதுடன் அதன் உறுப்பினர்கள் மீதும், செயலூக்கமான ஆதரவாளர்கள் மீதும் வழக்கு தொடரவும் அனுமதிக்கிறது இந்த சநதச. இவ்வாறு முத்திரை குத்தப்படும் முன்னர் எந்த வழக்கு விசாரணையும் நடைமுறையும் இருக்காது. ஓர் அமைப்பு அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னர் அல்லது அவ்வாறு ஒரு தனிநபர் அறிவிக்கப்பட்ட பின்னர், மீளாய்வுக் குழு ஒன்றால் (பணியிலுள்ள அல்லது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலானது) விசாரிக்கப்பட்டு அவர்கள்மீது குத்தப்பட்ட முத்திரை தொடர வேண்டுமா, இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.

தீவிரவாதச் செயல்கள் அமைப்புகளால் செய்யப்படவில்லை, தனிநபர்களால் செய்யப்படுகின்றன என்று மாநிலங்களவையில் அரசு கூறியிருக்கிறது. தனிநபர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தாவிட்டால் அவர்கள் சட்டத்திலிருந்து நழுவ வாய்ப்புக் கிடைத்து, வேறு பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் என்றும் அரசு கூறியுள்ளது. இந்தத் திருத்தம் கொண்டுவருவதற்கு முன்பே தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லது தீவிரவாதச் செயல்களுக்குத் துணைபோகிறவர்கள், உதவுகிறவர்கள்மீது சநதச - படி வழக்குத் தொடுக்க முடியும் என்றிருக்கும் நிலையில் இப்போது தனிநபர்களை ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்துவதற்கான திருத்தத்தின் பலன் என்ன என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தனிநபர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதால், ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் கையொப்பமிட்டுள்ள நாடுகளுள் ஒன்றான இந்தியாவும் அதைப் பின்பற்றுகிறது என்று காரணம் சொல்லப்படுகிறது. இந்தக் காரணம் சட்டம் ஏன் என்பதைப் பகுதியளவு விளக்குகிறது; என்றாலும் ஒரு தனிநபரைத் தீவிரவாதி என்று முத்திரை குத்தும் அதிகாரம் மத்திய அரசிற்கு ஏன் வழங்கப்படுகிறது என்பதற்குப் பதில் இல்லை.

தனிநபரைத் ‘தீவிரவாதி’ என்று முத்திரை குத்துவதற்கான வழிமுறையும் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. அமைப்புகளைத் ‘தீவிரவாத அமைப்புகள்’ என்று முத்திரை குத்தப் பின்பற்றப்படும் அதே வழிமுறையைத் திருத்தம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஓர் அமைப்பைப் போலல்லாமல் ஒரு தனிநபருக்கு அரசமைப்புச் சட்டத்தால் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் உண்டு. அரசமைப்புச்சட்ட உறுப்பு 21 பற்றி அரசுக்குத் தெரியாதா அல்லது தெரிந்தும் அதைப் புறந்தள்ளுகிறதா?

உள்ளார்ந்த வகையில் சநதச - கீழ் இவ்வாறு முத்திரை குத்தப்படுவதற்கு உடனடியாகச் சட்டப் பின்விளைவுகள் ஏதுமில்லை; ஆனால் இத்தகைய முத்திரை குத்தப்படுவதன் விளைவுகள் வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். இவ்வாறு முத்திரை குத்தப்பட்ட ஒருவர்மீது தீவிரவாதக் குற்றம் நிரூபிக்கப்பட வேண்டிய அவசியமோ அல்லது தீவிரவாதக் குற்றம் தொடர்பாக அரசு அமைத்திருக்கும் குழுவின் விசாரணையை அவர் எதிர்கொண்டிருக்க வேண்டிய அவசியமோ இல்லை.

தீவிரவாதம் தொடர்பான வலுவற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றமற்ற முஸ்லிம்கள் பலர் பல ஆண்டுகளாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையிலும் முஸ்லிம்கள் மீதான தீவிரவாதத் தாக்குதல்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளைத் தேசிய புலனாய்வுக் கழகம் பலவீனப்படுத்திவரும் நேரத்திலும் இந்தச் சட்டம் எவ்விதம் பாரபட்சமின்றிப் பிரயோகிக்கப்படும்? புலனாய்வு செய்து வழக்குத் தொடுப்பதிலுள்ள ‘கஷ்டங்களை’ச் சமாளிக்க இந்தத் திருத்தங்கள் அவசியம் என்று சொல்லப்படுவதைத் தீவிரமாக ஆராய்ந்து பார்க்கையில் அதில் உண்மையில்லையென்று தெரிகிறது. புதிய விதிகள்  தீவிரவாதக் குற்றங்களின் புலனாய்வையும் வழக்கையும் உண்மையில் பாதிக்கவில்லை, மாறாகப் புலனாய்வுகளும் வழக்குகளும் வலுவற்றிருப்பதால் பெரிதும் நாசத்திற்குள்ளாகியிருக்கின்றன.

சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலும் கவலையை ஏற்படுத்துகிறது. ஜூலை 8ஆம் தேதி மக்களவையிலும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது இந்தத் திருத்தம். நிலைக் குழுவிற்குச் சுட்டப்படவில்லை என்பதுடன் எந்த ஆய்விற்கும் விவாதத்திற்கும் உட்படுத்தப்படவில்லை. இந்த வகையில், தங்களுக்கு மக்களவையில் போதுமான எண்ணிக்கை இருக்கிறது, மாநிலங்களவையில் மாநிலக் கட்சிகளின் ஆதரவு இருக்கிறதென்று பல மசோதாக்கள் அடுத்தடுத்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதத்திலிருந்து இது வேறுபடவில்லை. நாடாளுமன்றம் வெறும் சம்பிரதாயமாகிவிட்டது. அதன் ‘உற்பத்தித் திறன்’ பற்றிய தேவையற்ற பெருமை இந்த மொத்தச் செயல்பாட்டையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 2019 தேர்தலுக்குப் பிறகு நிலைகுலைந்துபோயிருக்கும் எதிர்க்கட்சிகள் அடையாள எதிர்ப்பிற்கு மேல் எதுவும் செய்யவில்லை. இந்தியாவில் மக்களாட்சியின் நிலை நாம் நினைப்பதைவிட மோசமாக இருப்பதை இது காட்டுகிறது.

2018இல்தான் மாறுபட்ட கருத்து கொண்டவர்களும் செயற்பாட்டாளர்களும் ‘நகர நக்சல்கள்’ எனக் குற்றம்சாட்டப்பட்டுத், தெளிவற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிணைகூட இல்லாது சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதத்தை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவையே. ஆனால் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்கள் தவறாகவே பயன்படுத்தப்படும். இந்த விஷயத்தில் சட்டமியற்றும்போது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும்.

தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஆகஸ்ட் 10, 2019      

தமிழில்: க. திருநாவுக்கரசு

மின்னஞ்சல்: kthiru1968@gmail.com

 

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.