செப்டம்பர் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
செப்டம்பர் 2026
    • கட்டுரை
      மோடிக்குப் பயம் காட்டிய கரப்பான்பூச்சிகள்
      தமிழகத்தில் இடஒதுக்கீடு கிரீமிலேயர்முறை ஏன் தேவை?
      முஸ்லிம்களும் இடஒதுக்கீடும் ஒரு வரலாற்றுப் பார்வை
      இரண்டு பாடல்கள், இரண்டு தேசியக் கருத்துருக்கள்
      247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்
    • கதை
      வன்கெட்டு
    • பத்தி: காணச் சொல்லுகிறேன்
      ‘யார் கையையும் எதிர்பாக்காம வாழ்ந்திருவேன்’
    • கற்றனைத்தூறும் - 18
      புதிய பாதை புதிய பயணம்
    • திறந்த மடல்
      தேஜ்பால் வழக்கிற்குப் பிறகு: ஆண் முற்போக்குவாதிகளுக்குப் பெண்ணியவாதியின் மடல்
    • பாரதியியல்
      இறந்த எட்டே மாதங்களில் பாரதியின் வழிநின்ற ‘தமிழ் உலகு’
    • விருதுகள்
      விருதுகள், வாழ்த்துகள்
    • பதிவு
      காலச்சுவடு: 30 - 300
      அழகிரிசாமியும் மாதொருபாகனும்
      அகப்பயணத்தின் தடம்
      அடர் நிறத்தில் இசைக்கும் மனம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • பத்தி இன்றும் என்றும் 5
      சுமித் சர்க்கார் (1939 - 2026) வரலாறு என்னும் கலை
    • எதிர்வினை
      எந்தத் தமிழ்ச்சொல் மெய்யில் தொடங்குகிறது?
    • மதிப்புரை
      பெண்களுக்கு மறுக்கப்படும் ஹமார்ஷியா
    • கவிதைகள்
      தருணங்களின் புத்தகம்
      மரிக்கொழுந்து
      ஸுதிர் மோகே கவிதைகள்
    • அஞ்சலி: வைகறை வாணன் (1950 –2026)
      ‘வென்றிலன் என்றபோதும்...’
    • தலையங்கம்
      தவெகவின் நூறு நாள்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2026 மதிப்புரை பெண்களுக்கு மறுக்கப்படும் ஹமார்ஷியா

பெண்களுக்கு மறுக்கப்படும் ஹமார்ஷியா

மதிப்புரை
ஷாலினி பிரியதர்ஷினி

சிதைந்த பிம்பம்
 (நாடகம்)
கிரீஷ் கார்னாட்
தமிழில்: பாவண்ணன் 
வெளியீடு: 
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. ரோடு
நாகர்கோவில் - 1 
பக். 64
ரூ.. 60

 

“ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை; பெண்ணாக உருவாக்கப்படுகிறார்” என்கிறார் சிமோன் த பொவா. ஆண் மயப் பார்வையில் கட்டமைக்கப்படும் பெண் கதாபாத்திரங்களில் எங்கோ எப்படியோ ஒரு செயற்கைத்தனம் துருத்திக்கொண்டு தெரியும். முடிவுகளை நோக்கி நகர்த்தும் முக்கிய கதாபாத்திரங்களாக இருந்தாலும் உண்மையில் பெண்கள் அப்படிச் சித்தரிக்கப்படுவதைத்தான் விரும்புகிறார்களா என்று கேட்டால், இல்லை.

ஆண்களைப் போலவே பெண்களும் இயல்பாகவே தீமைக்கு ஆட்படுவதை விரும்புகிறார்கள். எவ்வித நன்னெறி விழுமியங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் சுதந்திரமாக ‘நான் இப்படித் தான்’ என்று வாழ்வதுதான் பெண்களின் தேர்வும்கூட. 

ஹமார்ஷியா என்ற சொல் இலக்கியவாதிகளுக்கு மிகவும் பரிச்சயமான சொல்தான். காவிய நாயகனின் வீழ்ச்சிக்குக் காரணமான குணம் ஒன்று அவனிடம் இருக்கும். அதுதான் ஹமார்ஷியா (Tragic Flaw). தர்மத்தால் வீழ்ந்தான் தர்மன், தற்பெருமையால் வீழ்ந்தான் லியர் மன்னன், பேராசையால் வீழ்ந்தான் மேக்பத், பொறாமையால் வீழ்ந்தான் ஒதெல்லோ, இருமைத் தடுமாற்றத்தால் வீழ்ந்தான் ஹேம்லட். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், வீழ்ந்தாலும் இவர்கள் கதாநாயகர்கள்தான். காவியங்கள் அவர்களைக் கொண்டாடத்தான் செய்தன. நாமும். எவ்வளவு பெரிய சுதந்திரம் அது. தீயவனாகவும் இருக்கலாம். அதே நேரத்தில் காவியங்கள் கொண்டாடும் தலைவனாகவும் இருக்கலாம். பெண் கதாபாத்திரங்களுக்கு இந்தச் சுதந்திரம் வெகு சில இலக்கியப் படைப்புகளில் மட்டுமே காணக் கிடைக்கும் அரிய விஷயம். கதாநாயகியின் ஹமார்ஷியா பற்றி இலக்கியங்கள் பெரிதாகப் பொருட் படுத்தாத நிலையே நெடுங்காலம் இருந்துவந்தது.

பெண்களை எழுதுவது எளிது. பெண் உளவியலை எழுதுவது அவ்வளவு எளிதல்ல. அதைத் திறம்பட தன் நாடகங்களில் செயல்படுத்திக் காட்டியவர் கார்னாட்.  ‘உடைந்த பிம்பம்’ (ஒடகலு பிம்பா) நாடகத்தில் வரும் பெண் கதாபாத்திரங்களின் உரையாடல் அதற்குச் சான்று. உடல்நலமில்லாத தங்கையின் எழுத்துத் திறமையை எவ்விதக் குற்றவுணர்வுமின்றித் தன் திறமையாக வெளிக்காட்டிக்கொள்ளும் கதாநாயகி, அதை நியாயப்படுத்த அவள் பட்டியலிடும் காரணங்கள், அவளுடன் உரையாடும் உருவம் (அவள் தங்கை) எழுப்பும் கேள்விகள், அவளுடைய நிறைவேறாத வேட்கை, பழியுணர்வு என்று நாடகம் முழுவதும் பெண் உளவியல் துல்லியமாகப் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. நாடகம் அதன் உச்சத்தை நோக்கி நகர்கையில் இரண்டு கதாபாத்திரங்களும் பேசிக்கொள்வது கிட்டத்தட்ட ஓர் அறிவார்ந்த உளவியல் கலந்தாய்வைப் போலக் கட்டமைத்திருப்பார் கார்னாட். பொதுவாக இத்தகைய உரையாடல்கள், இரண்டு ஆண்களுக்கிடையே நடக்கும் அல்லது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே நடக்கும். (ஆண் சொல்லும் இடத்திலும் பெண் கேட்கும் இடத்திலும் இருப்பாள்.) ஆனால் இந்த நாடகத்தில் இரண்டு கதாபாத்திரங்களுமே பெண் குரல்கள். இருவரும் இருத்தலியல் சிக்கல் பற்றிப் பேசுகிறார்கள், பிராய்டியன் ஆழ்மனம் பற்றிப் பேசுகிறார்கள், நார்ஸிஸம் பற்றிப் பேசுகிறார்கள், ரொமாண்டிக் இலக்கியம், ரஷ்ய இலக்கியம், விலகல் அடையாளக் கோளாறு பற்றிப் பேசுகிறார்கள், ழாக் தெரிதாவின் கட்டமைப்பு நீக்கக் கோட்பாட்டைப் பற்றிப் பேசுகிறார்கள்.

உடலுழைப்புத் தேவைப்படும் இடங்களில் பெண்கள் அதிகளவில் இருப்பதும், அறிவியக்கச் செயல்பாடுகளிலும் முடிவெடுக்கும் பொறுப்புகளிலும் ஆண்கள் அதிகளவிலும் சலுகை அடிப்படையில் ஒன்றிரண்டு பெண்களும் இருப்பதைப் பார்த்துப் பழகிப்போன நமக்கு இந்த நாடகத்தின் மொத்தக் குரலுமே பெண்களுடையதாக இருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. நாடகத்தின் ஆண் கதாபாத்திரம் நிஜத்திற்கு மிக நெருக்கமாகப் படைக்கப்பட்டிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அவன் எப்போதும் இருக்கிறான், இருப்பான்; அவனாகவே; எவ்வித மாற்றத்திற்கும் இடங்கொடாமல். இதில் ஆறுதலான விஷயம், இந்த நாடகத்தில் பெண்களும் அப்படியே இருக்கிறார்கள், பிம்பங்கள் உடைந்த பின்பும் முகத்திரைகள் கிழிந்த பின்பும் தங்கள் தீமைகளோடு, எவ்வித உள நெருக்கடிக்கும் ஆளாகாமல் அப்படியே இருக்கிறார்கள்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.