பனிப்பாறை
கதை
பனிப்பாறை
கனகராஜ் பாலசுப்பிரமணியம்
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
இஸ்தான்புல் விமான நிலையத்தில்தான் அவளைப் பார்த்தாள் சபா மஜீத். மிக உயரமாகவோ குட்டையாகவோ இல்லாமல் சாதாரண உயரத்தில் இருந்தாள்; அதே போலத்தான் அவளுடைய உடல் நிறமும்: மாநிறம். கண்டிப்பாக இவளொரு இந்தியப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்த சபா அந்தப் பெண்ணுடன் உரையாடத் துடித்தாள். அவளோ கைப்பேசிக்குள் மூழ்கியிருந்தாள். அந்த விமான நிலையத்தின் புறப்படும் வாயில் ‘டி-2’ வில் இருப்பவர்களில் இவள் மட்டும்தான் இந்தியப் பெண் என்று கருதினாள் சபா