நண்பர், வழிகாட்டி
கட்டுரை
நண்பர், வழிகாட்டி
மார்த்தா ஆன் செல்பி
என்னுடைய நினைவு சரியென்றால், நான் ராமை முதன்முதலாகச் சந்தித்தது 1986ஆம் ஆண்டு, இலையுதிர் பருவத்தில். சிகாகோ பல்கலைக்கழகத்தில் நார்மன் கட்லரிடம் இரண்டாண்டுகள் தமிழ் கற்றிருந்தேன். கனடா நாட்டிற்குப் போய்வந்ததைத் தவிர, 1986ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்ததுதான் என்னுடைய முதல் அயல்நாட்டுப் பயணம். கனடாவை ‘அயல் நாடு’ என்று சொல்வதற்கில்லை. மதுரையில் கு. பரமசிவத்திடமும், என்னுடைய தோழி எலைன் க்ரேடக்கிடமும் (இவர் இப்போ டெக்ஸாஸ் மாநிலம், சௌத்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் மதங்களைப் பற்றிய கல்வித்துறைப் பேராசிரியராகப் ப