சட்டவியல் நோக்கில் மொழி
சட்டவியல் நோக்கில் மொழி
மொழிகளின் தன்மை, தொன்மை, வளம், நுட்பம், சிறப்பு குறித்த ஆய்வுகளில் மொழியியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மொழியையும் அதன் பயன்பாட்டினையும் சிந்தித்து இலக்கியப் படைப்புகளாலும் இலக்கண வரையறைகளாலும் பங்களிப்புச் செய்வோரும் உள்ளனர். ஆனால் ஒரு மொழியின் சொற்கள், அவையுணர்த்தும் பொருள், அதனால் சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகளில் பெருமளவு கவனம் செலுத்திவரும் மற்றொரு பிரிவினர் சட்டவியலார் (Jurisprudents) ஆவார். குடியரசு அமைப்பில் சமுதாயத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட நலன் பயக்கும் வரையறைகள், அரசினரால் ஏற்றுக்கொள்ளப்படும் போது அது சட்டமாக உருப்பெறுகிறது. சட்டம் என்ற படைப்பிலக்கியத்தை அது எந்த நோக்கத்திற்காக இயற்றப்பட்டது என்பதனை அதனைப் படிப்போர் அனைவரும் எளிதாக அறிந்துகொள்ளும் வகையி