சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல்
சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாத்தல்
(நீதியரசர் பி.பி. சாவந்த் அவர்களைக் கௌரவிக்கும்முகமாக ஒரு கட்டுரை)
பழங்குடியினரின் உரிமைக்காகப் போராடிய பாதிரியார் ஸ்டேன் சுவாமி நிறுவனக் கொலைக்கு ஆளானதன் மூலமாகவே இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் சிறுபான்மையினரின் உரிமையானது மிகுந்த கவலைக்குரிய நிலையில் உள்ளமை வெளிச்சத்திற்கு வந்தது. மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த அதிகாரிகளின் அசட்டையும் பல சமீபத்திய அறிக்கைகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது. சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் மேல் இந்தியா முழுவதும், முக்கியமாகக் கடந்த சிலவருடங்களாய் நான் பணியாற்றிய வடகிழக்கு மாநிலங்களிலும், தொடர்ந்து நிகழ்த்தப்படும் வன்முறைகளும் குற்றங்களும் இந்தியக் குற்றவியல் நீதி அமைப்