வ.ரா.வின் மகாகவி பாரதியாரும் வ.ரா.வும்
வ.ரா.வின் மகாகவி பாரதியாரும் வ.ரா.வும்
வ.ரா.
சுப்பிரமணிய பாரதியின் வாழ்வில் நடைபெற்ற பல்வேறு பரபரப்பான நிகழ்வுகளைப் போன்றே பிரிட்டிஷ் போலீஸாருடனான அவரது சர்ச்சைக்குரிய சந்திப்பும் நாடகத்தன்மை வாய்ந்ததாகும். சென்னை பிராட்வேயில் அமைந்திருந்த இந்தியா பத்திரிகை அலுவலகத்தின் மாடிப்படிகளில் கீழிறங்கிக்கொண்டிருந்தபோது பாதி வழியில் மேலே ஏறி வருகிற ஒரு போலீஸ்காரரைஅவர் பார்த்தார். அனிச்சையாகச் செயல்படுகிற தருணங்களில் தனது வழக்கப்படி நடந்துகொள்வதைப் போன்று அவர் ஏதோ ஒரு பாடலை அப்போது பாடிக்கொண்டிருந்திருக்கலாம். போலீஸ்காரர் தன்முன் நீட்டிய கைது வாரண்டைப் படித்தார். அதில் இந்தியா பத்திரிகை ஆசிரியர் பெயர் கண்டிருந்தது. அவர் மேலே அலுவலகத்தில் இருக்கிறார் என்று தெரிவித்துவிட்டு விரைந்து மீதமுள்ள படிகளைக் கட