முதல் பெண்ணியப் போராளிகள்
முதல் பெண்ணியப் போராளிகள்
தேரவாதப் பௌத்தத்தின் பாலி நெறிமுறையின்படி, புத்தர் முதன்முதலில் துறவு மரபை நிறுவியபோது, அதில் பெண்களுக்கு இடமில்லாமல் இருந்தது. ஆனால் அவருடைய வளர்ப்புத் தாயும் சிற்றன்னையும் சித்தியும் மகனின் போதனைகளால் ஈர்க்கப்பட்டுத் துறவறம் பூண்டவருமாகிய அரசி மகாபஜாபதி கௌதமி ஆகியோர் அதனை ஏற்கவில்லை. துறவு மரபில் பெண்களும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்காகத் தன்னுடைய ஐந்நூறு பெண் தொண்டர்கள் பின்தொடரப் புத்தர் அந்நாட்களில் வசித்து, போதித்துவந்த வைசாலிக்கு நடந்துசென்றார். பெண்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்று மூன்றுமுறை புத்தருக்கு வேண்டுகோள் விடுத்தார். மூன்றுமுறையும் அனுமதி மறுக்கப்பட்டது. அங்குத்தர நிகாயத்தில் குறிப்பிட்டுள்ளபடி “பிறகு மகாபஜாபதி கௌதமி வாயிலுக்கு வெளியே நின்றுகொண்