பிப்ரவரி 2024
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      ‘இது காடு; நகரமல்ல’
      ஜனநாயகத்துக்கு வெளியே
      சொல்வது அல்ல, சொல்லவருவதே முக்கியம்: அழகிரிசாமியின் மொழியாக்கங்கள் குறித்த ஆழமான அலசலுக்கான முன்குறிப்புகள்
      புதியன புனையும் கலைஞன்
    • கதை
      சுவை
      தோற்ற மயக்கம்
      விடுதலை
    • பார்வை
      நாள்பட்ட நோய்கள்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
      சு.ரா. கடிதங்கள்
    • கண்ணோட்டம்
      கருத்துரிமைக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’
    • எதிர்வினை
      இளங்கோவனுக்கும் மாலனுக்கும்
    • மதிப்புரை
      எளியவர்களின் இயலாமை
    • நினைவு நூற்றாண்டு
      பாவலரேறு ச. பாலசுந்தரனார்: கருங்கல் சிற்பி பேராசிரியரான கதை
    • தலையங்கம்-2
      சாதனையை மறைக்கும் வேதனைகள்
    • கவிதைகள்
      காலையின் சிறுவர்கள்
      யார் காரணம்?
    • தலையங்கம்
      காவிய ராமன் x காவி ராமன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2024 கடிதங்கள் கடிதங்கள்

கடிதங்கள்

கடிதங்கள்

ஜனவரி மாத இதழில் நயன்ஜோத் லாஹிரி நேர்காணலில் மருதனின் கேள்விகள் ஆக்கப்பூர்வமாகவும், சிறந்த பதில்களைப் பேட்டியாளரிடமிருந்து பெறும் வண்ணமாகவும் அமைந்திருந்தன. நேர்காணல் செய்பவர் தான் சந்திக்கும் ஆளுமையை ஆழ்ந்து வாசித்துப் புரிந்துகொண்டால்தான் இத்தகைய கேள்விகளைக் கேட்க முடியும்.

 வரலாற்றைச் சுவைபட எழுத முடிந்த ஆய்வாளரிடமிருந்து ஒரு நேர்காணலையும் சுவைபடக் கொணர முடிந்திருக்கிறது. கொஞ்சம் வறட்டுத்தனமான பொருண்மையைத் திறமையாகக் கையாண்டு, இவ்வளவு நெடிய நேர்காணலைப் படிக்க மிக இலகுவான மொழியில் தந்தமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

ஜா.மு. திருவள்ளுவனார்,
திருச்செங்கோடு.

 

மருதனின் வினாக்களுக்கு வரலாற்றாசிரியர் நயன்ஜோத் லாஹிரி நேர்மையாகவும் வெளிப்படையாகவும் உறுதியாகவும் பதில்கள் அளித்திருக்கிறார். 

நானும் வரலாறு படித்தவன் என்ற வகையில் வரலாற்றாசிரியர் கூறிய அனைத்துப் பதில்களும் என் மனதில் நான் நினைத்ததை அவர் சொன்னது போல் மிகுந்த உற்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தியது.  உதாரணமாக வரலாறு படிக்கும் மாணவர்களை ஆசிரியர் குறிப்பிட்டதுபோல் வகுப்பறையோடு நிற்காமல் வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றால் மனத்தில் ஆழமாகப் பதிவுறும்.  வரலாற்றின் முக்கியத்துவம் தெரியும்.

அதிலும் வரலாற்றுக் காலத்தையும் நிகழ் காலத்தையும் ஒப்பிட்டு, உதாரணமாக நிகழ்கால அரசியல் நடப்புகளை எடுத்துக்காட்டுடன் கூறியது பாராட்டுக்குரியது.  இதுபோல எல்லோரும் பயனடையும் வகையில் நிறைய நேர்காணல்களை வாசகர்களுக்கு வழங்க காலச்சுவடு ஆசிரியருக்கு எனது பணிவான வேண்டுகோள்.

ஜி. சிவகுமார்,
வேளச்சேரி.

 

மு. இராமநாதனின் ‘என்று வடியும் இந்தப் பெருமழை வெள்ளம்?’ கட்டுரையில், சமூக ஊடகங்களில் டிசம்பர் 2023 பெருமழை வெள்ளத்தைப் பற்றி வெளியான இரு விவாதங்கள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். டிசம்பர்  பெருமழை வெள்ளத்திற்கும், 2015 பெருமழை வெள்ளத்திற்குமான விமர்சனம் குறித்துத் தெளிவாக விளக்கியுள்ளார்.

ரூ.4000 கோடி கணக்கு என்ற தலைப்பில் கொடுத்த விளக்கத்தின் இறுதியில், இந்த விவாதம் பெரிதானபோது அமைச்சர் கே.என். நேரு அளித்த விளக்கத்தைக் கூறி, “சமூக ஊடக விவாதங்கள் பல பக்கச் சார்புடையனவாக இருக்கின்றன” என்று கூறியுள்ளார். என்னைப் போன்றவர்களும் எழுப்பிய, 4000 கோடி செலவினம் குறித்த விவாதம் எப்படி எழுந்தது என்பதைக் குறிப்பிடாமல் தவிர்த்துள்ளார்.

பெருமழை பெய்யும் என வானிலை அறிக்கைகள் வந்ததும் அரசுத் தரப்பில் இருந்து  முதல்வர், அமைச்சர்கள், சென்னை மாநகர மேயர் உட்பட அனைவரும் அறிக்கையிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூறியது என்ன? முதல்வர் 4000 கோடி செலவில் பணிகள் நடந்துள்ளன என்றார். அமைச்சர் நேரு 97% பணிகள் முடிந்து விட்டன என்றார். இவர்கள் சொன்னதெல்லாம், எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், சென்னையில் ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தேங்கி நிற்காது என்றுதான்.  அதனால்தான் மழைநீர் தேங்கிய போது (அதுவும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்) விமர்சனம் செய்ய நேர்ந்தது.

விமர்சனம் அதிகரித்த பின்னர்தான் அமைச்சர் நேரு, மதிப்பீடு ரூ.5166 கோடி என்றும், இதுவரை ரூ.2191 கோடி மதிப்பிலான பணிகள் முடிவடைந்திருப்பதாகவும் கூறினார் என்பதை ஆசிரியர் கண்டுகொள்ளாதது பக்கச் சார்புடையதாகும்.

மாலனின் எதிர்வினைக் கட்டுரையில், ராஜாஜி குறித்து எழுதும்போது, “படேல் மறைவுக்குப் பின் நேருவின் அழைப்பின் பேரில்தான் மத்தியில் உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்” என்கிறார். இது தகவல் பிழையாகும்.

ராஜாஜி கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்து விலகிவந்த பின்னர் நேரு, படேலுடன் ஆலோசனை செய்து, ராஜாஜியை அமைச்சரவையில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகு, ராஜாஜி இலாகா இல்லாத அமைச்சராக 1950, ஜூலை 15 அன்று பதவியேற்றார். படேலின் மரணத்திற்குப் பின் உள்துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார் என்பதே நடந்த வரலாறு ஆகும்.

சீ. இளங்கோவன்,
சேலம்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.