நிறைவாழ்வு தொடர்க
வியப்பாகத்தான் இருக்கிறது. இரண்டு நாள் கருத்தரங்கம். பேசுபொருள்: ‘ஆ.இரா. வேங்கடாசலபதியின் பங்களிப்புகள்.’ அவர் ஒரு பேராசிரியர்; வரலாற்று ஆய்வாளர். அவரது ஆய்வுப்புலம் அரசர்களின் வரலாறு அன்று; சமூகப் பண்பாட்டு வரலாறு.
காலச்சுவடு அறக்கட்டளை, கடவு, தி இந்து லிட் ஃபார் லைப் அமைப்புகள் இணைந்து பிப்ரவரி 8, 9ஆம் தேதிகளில் நடத்திய நிகழ்வில், சலபதியின் பங்களிப்பைக் குறித்து எழுத்தாளர்களும் ஆய்வாளர்களும் பிரமுகர் களும் பேசினார்கள். இரண்டு நாளும் அரங்கு நிறைந்திருந்தது. எல்லாம் தருமமிகு சென்னையில்தான்.
அறியப்படாத காலம் இருந்தது
ஒரு சம்பவத்தைச் சொல்லாமல் என்னால் தொடரமுடியாது. ஹாங்காங்கில் இலக்கிய வட்டம் என்ற அமைப்பை நடத்திவந்தோம். தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்கு, அயல் நாட்டில் கிடைக்கக் கூடிய ஆதரவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. என்றாலும் பதினைந்து முதல்