பேரன்பும் பெருங்கோபமும்
அன்புள்ள இரண்டாம் ‘அங்கிள்சாம்’,
அண்மையில் நான் பார்த்த ‘பேரன்பு’ திரைப்படத்தைப் பற்றிய என்னுடைய சில கருத்துகளை மட்டும் தேர்ந்தெடுத்து இதை எழுதுகிறேன். இதுநாள்வரையில் நீங்கள் எவ்வளவு ‘ஆசீர்வதிக்கப்பட்ட’ திரைப்படங்களைப் பார்த்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக இதை எழுதுகிறேன்.
அத்தியாயம் ஒன்று: பேரன்பு மிகையானது.
“சொற்களின் அரசியல் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.”
எங்கள் நாட்டில் ஒரு தத்துவமுண்டு, “தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை.” எளிமையாகச் சொல்வதெனில் ‘அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு’ என்று எங்கள் முன்னாள் கவிஞரின் வரிகளைத்தான் சொல்ல வேண்டும். “ஏன் உங்கள் அம்மாக்களுக்கு அறிவிருப்பதில்லையா?” என்று நீங்கள்