சென்னைப் புத்தகக் காட்சி பொன்விழாவை நோக்கிய பயணம்

ஆரவாரம், கொண்டாட்டம், அறிவுத்தேடல் கொண்ட மக்கள் திரள், எழுத்தாளர்களின் சந்திப்பு, மகிழ்ச்சியோடு சேர்ந்து எழும் புழுதி என ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நிகழும் புத்தகத் திருவிழா வெறும் வணிகமல்ல; பண்பாட்டு நிகழ்வு. அடுத்த ஆண்டு பொன்விழாவைத் தொடவிருக்கும் இந்த அறிவுத் திருவிழாவைப் பதிப்பகங்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் மனமுவந்து கொண்டாடினாலும் இந்த நிகழ்வைப் பற்றிய மனக்குறைகளும் கொண்டாட்டத்திற்கு இடையில் பொங்கி வருகின்றன. உள்கட்டமைப்புப் போதாமைகள், நவீன மாற்றங்களுக்கு முகம் கொடுக்கத் தயங்கும் நிர்வாகம் எனப் பல விதமான விமர்சனங்களும் எழுகின்றன. வெற்றிகரமாக 49 ஆண்டுகளை முடித்திருக்கும் இந்தப் பண்பாட்டு-வணிக நிகழ்வின் தரம் குறித்த விவாதங்கள் தீவிரம் பெற்றுள்ளன.
வாசகர் திரள் எனும் வலிமை</spa
