கைமணலின் ஈரம்
தனது ஆசிரியரும் முன்னோடிக் கலைஞருமான
ஆர்.பி. பாஸ்கரன் குறித்து டிராட்ஸ்கி மருதுவின் உரை.
எழுத்து வடிவம் கிருஷ்ண பிரபு
திசையறியாப் பயணத்தில் அடிவானமே இலக்காகிறது. போகப் போக நீளும் பயணம் அது. நம்மைச் செலுத்தும் இடத்திலிருப்பவர்கள் சரியான வயதில், சரியான நேரத்தில் நமக்கான திசையையும் இலக்கையும் விலகிநின்று சுட்டிக்காட்ட வேண்டும். சுட்டிக் காட்டப்பட்ட வழியில் எல்லோரும் செல்வார்கள் என்றும் சொல்ல முடியாது. இங்குதான் ஓர் ஆசிரியர் கலங்கரை விளக்கு போல் மின்னுகிறார். பாஸ்கரன் பலருக்கும் திசையைக் காட்டிச் செலுத்தியிருக்கிறார். ஒருசிலர் அத்திசையில் பயணப்பட்டு நெடுந்தூரம் வந்துவிட்டோம். ஆசிரியர் – மாணவர் உறவு சிக்கலானது. அது கைமணல் போல் நழுவக் கூடியது. முயற்சியும் உழைப்பும் இன்றிக் கைப் பள்ளத்தில் ஏந்தும் மணல், சேகர