கண்டிராசன் கதை
கண்டியின் கடைசி ராசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கதை சொல்லப்போகிறேன். அவரின் முழு வரலாறு அல்ல. ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டு அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டு, நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் பற்றியது. நீங்கள் வாசிக்கப்போகும் இந்த வியாசத்திற்கு இரண்டு காலனிய கால ஆவணங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். இதில் ஒன்று ஆங்கிலேயத் துருப்புகளுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்த ஒருவரின் நினைவுகூரல்; மற்றையது ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன், தனது அரச குலத்தினருடனும் சேவகர்களுடனும் கொழும்பிலிருந்து மதராஸ் பட்டினத்திற்குக் கொர்ன்வாலீஸ் என்ற கப்பலில் நாடு கடத்தப்பட்டதைப் பற்றிய ஆங்கிலச் சேவைத்துறை அதிகாரியின் நாட்குறிப்பு.
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் கைதானதை நேரில் பார்த்ததாகச் சொல்லுகிறவர் டி.வீ.ஏ. டியஸ். இதுபற்றி இவர் எழுதியது அந்த நாட்களில் பிரபலமான பத்திரிகையான சிங்கள சங்கரவாவில் 1861ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த