கவிதைகள்
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
அரவம்
நஞ்சாலான உடலைக் கொண்டு
உலகை வலம் வரும்
அரசதிகாரத்தின்
காடுகளில் அலையும்
ஆதி மனிதனின்
சிரிப்பொலியில் அதிர்கிறது
வனம்.
என் நிலம்
கடும் விஷங்களை
முறிக்கும் செடிகளைக் கொண்டது.
எதிர்ப்பக்க நடை
செடிகள் வளர்ந்துகொண்டிருக்கும்
பூங்காவின் நீள்வட்ட நடைப்பாதையில்
முதல் சுற்றில் மார்புகள்
இரண்டாம் சுற்றில் முகம்
மூன்றாவதில் பாதம்
எதிர்ப்பக்கமாகச் சுற்றுவதில்
இத்தனையுண்டு பார்க்க.
எல்லோரைப் போலவும்
நாமும் சுற்ற
கால்கள்<b