அவுரி
ஓவியங்கள்: மணிவண்ணன்
என் பெயர் அனிருத்த போஸ். திருமணமாகாத இருபத்தொன்பது வயதினன். கடந்த எட்டு ஆண்டுகளாகக் கல்கத்தாவில் ஒரு விளம்பர முகமையில் வேலைசெய்துவருகிறேன். கிடைக்கின்ற ஊதியத்தில் சர்தார் சங்கர் வீதியில் ஓர் அடுக்ககத்தில் ஓரளவுக்குச் சௌகரியமாக வாழ்கிறேன். தெற்குப் பார்த்த இரண்டு ஆஅறைகளுடன் கீழ்த்தளத்தில் இருந்தது என் வீடு. இரண்டு வருடங்களுக்கும் முன் வாங்கிய அம்பாஸிடர் காரை நானே ஓட்டுகிறேன். ஒழிந்த நேரங்களில் கொஞ்சம் எழுதுகிறேன். அவற்றில் மூன்று கதைகள், இதழ்களில் வெளியாகி எனக்குப் பரிச்சயமானவர்களால் பாராட்டப்பட்டன. ஆனாலும் எழுதுவதால் மட்டுமே வாழ்க்கைச் செலவுக்கு வேண்டியதைச் சம்பாதித்துவிட முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தது.
கடந்த சில மாதங்களாக எதையுமே நான் எழுதுவதில்லை. மாறாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்கத்திலும் பீகாரிலும் இருந்த அவுரித் தோட்டங்களைப் பற்றி