ஆசீர்வாதம்
சிறப்புப் பகுதி
பொருநை பக்கங்கள்
ஆசிர்வாதம்
ரவிசுப்பிரமணியன்
முன்னதாக எதுவும் சொல்லவில்லை. திடீரென ஒருநாள் மாலை ஐந்து மணியளவில் நண்பர் கலியமூர்த்தி என் விடுதியில் இருந்த என் அலுவலக அறைக்கு வந்து நின்றார்.
அடடே வாங்க கலியமூர்த்தி. என்ன திடீர்ன்னு.
எம். வி. வி வந்துருக்கார்.
ஐயோ எங்க?
கீழ நிக்கிறார்.
ஏன் மேல கூட்டிட்டு வர வேண்டியதுதான கலியமூர்த்தி?
இல்ல நீங்க இருக்கீங்களான்னு பாத்துட்டு வரச்சொன்னாரு.
இருங்க நான் கூட்டிட்டு வரேன்.
இருங்க நானும் வரேன் என்று சொல்லிவிட்டு கணக்குப் பேரேடுகளை எடுத்து வைத்துவிட்டு அவசரமாகப் படியிறங்கி, அவரைப்பார்த்து வாங்க என்று சொல்லி வணங்கிச் சிரித்தேன்.
வழக்கம்போலத் தோளில் ஒரு தட்டு.