க்ளிப் மாட்டிய பற்களால் புன்னகைப்பவர்கள்
கவிதைகள்
க்ளிப் மாட்டிய பற்களால் புன்னகைப்பவர்கள்
பெரு விஷ்ணுகுமார்
1
அந்தக் கடவாய்ப் பல்லிருந்த ஈறுதான் எங்கள் பூர்வீக நிலம்
அந்நியர்கள் யாரும் நுழையாதிருக்கவே
இந்த எனாமல்-வேலி.
தவறாமல் நிகழும் பற்பசை வழிபாட்டில்
நுரைதள்ள வெறியாடுகிறது தூரிகைச் சடங்கு
2
நன்றாக வாழ்ந்து-கெட்டு இறுதிக்காலத்தில்
உடம்பே எலும்பாக அல்லது
நீளமான பல்லாகத் தெரியும் மரங்களை
நிர்வாணமாய்க் காணும்போதுதான் புரிகிறது
இவ்வளவு நாட்கள் இலைகள் மறைத்து
வான்வரைக்கும் வளர்ந்து நின்றது
வேர்கள்தானா..?
&