தனிமனிதனுடைய விடுதலையே சமூக விடுதலை
நேர்காணல்: நாகரத்தினம் கிருஷ்ணா
சந்திப்பு: க. பஞ்சாங்கம்
தனிமனிதனுடைய விடுதலையே சமூக விடுதலை
புதுச்சேரியைச் சேர்ந்த நாகரத்தினம் கிருஷ்ணா தற்போது பாரிஸில் வசிக்கிறார். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராக அங்கு செயல்படுகிறார். ‘லெ கிளேஸியோ’, ‘பிரான்சுவாஸ் சகன்’, ‘அல்பர் கமுய்’ போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை பிரஞ்ச் மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘காஃப்காவின் நாய்க்குட்டி’, ‘நீலக்கடல்’, ‘இறந்த காலம்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ ஆகிய