மூக்கையா
பதிவு
கிருஷ்ண பிரபு
மூக்கையா
இந்தியக் கலை மரபில் தனிப்பட்ட கலைஞனின் சுயவெளிப்பாட்டு ஊடகமாக மட்டுமே கலை இருந்ததில்லை. ஆன்மீகம், அரசியல், சமயம் போன்ற அதிகாரக் குழுக்களின் உணர்வையே அது பிரதிபலித்திருக்கிறது. ஓவியங்களும் சிற்பங்களும் அவ்வாறே உருவாக்கப்பட்டன. கீழைத் தேய நாடுகளின் எல்லா இனக் குழுக்களுக்கும் இந்தத் தன்மையானது பொருந்தி வரக் கூடியதுதான்.
காலனியர்களின் வருகை காரணமாக இந்தியாவில் கலைப்பள்ளிகள் தோற்றம் கண்டபோதும் ஒரு தொழில் என்ற அளவிலேயே கலை வேலைப்பாடுகள் கருதப்பட்டன. மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் பரவ ஆரம்பித்த பிறகுதான் இந்தப் போக்கில் மாற்றங்கள் ஏற்படத்