நட்பார்ந்த கைகளும் புன்னகையும்
நட்பார்ந்த கைகளும் புன்னகையும்
பாவண்ணன்
சித்தலிங்கையா (1954 – 2021)
1982இல் கர்நாடகத்தில் ஹொஸபேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்குக் காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்திவந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்கிய நாலைந்து நாட்களிலேயே எனக்கு நண்பராகிவிட்டார். அவருக்கு நாடகங்கள்மீது தணியாத ஆர்வமிருந்தது. ஒருநாள் நான் முன்வரிசையில் இருந்த மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது பின்வரிசை மேசையைச் சுற்றி ஆறேழு இளைஞர்கள் உட்கார்ந்துகொண்டு ஒரு பாட்டின் வரிகளை ஒருமித்த குரலில் பாடிப்பாடிப் பயிற்சி செய்தார்