கவிதை
பொருள் நூறு (1966)
அஞ்சல்
அஞ்சலிலே என் ஆசையை எழுதினேன்.
பஞ்சி இன்றிப் பதில் ஒன்றனுப்பினாள்.
ஆயினும்,
படித்திடல் இயலா நெடுத்த பதில் அது.
ஆதலால் நேரிலே அவள் பாற்
பேர்தல் புரிந்ததன் பொருள் அறிந்தேனே.
ஆணி
அடிப்பதைப் பொறுக்கவே அமைந்ததுன்
தலையே
ஆள்பவர்க் குதவவோ அமைந்ததுன்
கூரே
அடுத்தவர் கைப்பட்டமைந்ததுன் உருவம்-
ஆதலால்,
விரும்பியவண்ணம் நின் இரும்புமேனி
இருபுறம் கூர் எடுத்து இன்னா
புரிபவர்க் கீண்ட எப்பொழுதும் ஆகாதே!
கவிதை
கவிதை எழுத ஓர் கதைஞன் உட்கார்ந்தான்
இரவெலாம்
இருந்திருந் தெழுதி எழுதிப் பார்த்தான்
மூக்கிலே விரலை மோந்து பார்த்தான்.
ஓட்டுக் கூரையை உற்றுப் பார்த்தான்
கோப்பியும் அடிக்கடி குடித்துப் பார்த்தான்
ஈற்றிலே இரண்டொரு நாவல்
தீட்டினான்.
மனையாள் தேற்றி நின்றாளே!
அன்றாடம் நம் வாழ்வில் புழங்கும் பொருள்களில் நூறு பொருள்கள் பற்றிய குறுங்கவிதைகள். அவற்றில் மூன்று.