முத்துலிங்கத்துடன் ஒரு பயணம்
தமிழ் இலக்கிய, பண்பாட்டுப் பரப்பில் நீண்டகாலமாகச் செயலாற்றிவரும் ஆளுமைகளில் 80 வயதைக் கடந்தவர்களின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாகக் காலச்சுவடு வெளியிடும் தொடரின் இரண்டாவது கட்டுரை இது. சென்ற இதழில் ஓவியர் ஆர்.பி. பாஸ்கரனைப் பற்றி ஓவியர் ட்ராட்ஸ்கி மருது எழுதிய கட்டுரை இடம்பெற்றிருந்தது. இந்த இதழில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் பற்றி
மு. இராமனாதன் எழுதுகிறார்.
– பொறுப்பாசிரியர்
எப்போதாவது நான் டில்லிக்குப் போவதுண்டு. அது முக்கியமில்லை. 2012ஆம் ஆண்டில் ஒரு முறை சென்னையிலிருந்து தில்லிக்குப் போய் வந்தேன். அந்தப் பயணம் எனக்கு முக்கிய மானது. ஏனெனில், அந்தப் பயணத்தில் என்னுடன் அ. முத்த