ஆகஸ்ட் 2022
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      இலங்கை அரசியல் மாற்றம் ஏமாற்றம்
      தமிழ் வேதப் பொஸ்தகமும் இரண்டு ஐரோப்பிய ஐயர்களும்
      தா. இராமலிங்கத்தின் கவிதைகள் உடலும் உடல் கடத்தலும்
      முடிவில்லாப் பயணத்தின் தொடக்கம்
      ஈழத்தமிழுக்கு அணி சேர்த்த பெருமகன்
    • உரை
      கருத்துரிமை விருது
    • கதை
      பியானோ
    • பாரதியியல்
      கோயில் நுழைவுப் போராட்ட வரலாற்றில் பாரதி (பாரதியின் ‘கோயில் திருத்தம்’)
    • கலந்துரையாடல்
      அனைவரதும் கூட்டாண்மைகளை உள்ளிணைக்கும் இலங்கையைக் கட்டியமைத்தல்
    • அஞ்சலி: பீட்டர் ப்ரூக் (1925-2022)
      நவீன நாடகவியலின் பிதாமகன்
    • உவேசா: எதிர்வினை
      சாதி என்னும் அடைக்கும் தாழ்
    • ஆடுகளம்
      ஃபார்ம் என்னும் புதிர் அற்ப சுகங்களும் முக்தி நிலையும்
    • அஞ்சலி: ஊரன் அடிகளார் (1933-2022)
      எப்பிறப்பில் காண்போம் இனி?
    • அஞ்சலி: அச்சுதன் கூடலூர் (1945-2022)
      எனது நண்பன்
    • கவிதைகள்
      வெள்ளைச் சட்டையைத் துவைக்கும் கலை
    • தலையங்கம்
      யாருமே பொறுப்பில்லையா?
    • உகாண்டா குடியரசுச் சிறுகதை
      சன்ஷைன்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு ஆகஸ்ட் 2022 தலையங்கம் யாருமே பொறுப்பில்லையா?

யாருமே பொறுப்பில்லையா?

தலையங்கம்

சேலம், பெரியார் பல்கலைக்கழகம் தற்போது நடத்திய பருவத்தேர்வில் வரலாற்றுத் துறை முதுகலை முதலாண்டு மாணவர்களுக்கான பாடத்தில் சாதி குறித்துக் கேட்டிருந்த வினா விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.  ‘தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்பது கேள்வி. இது கொள்குறி வினா. நான்கு விடைகளாக ‘மகர், நாடார், ஈழவர், ஹரிஜன்’ ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. ‘தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் (1880 முதல் 1947வரை)’ என்னும் பாடத்திற்கான வினாத்தாள் அது. அப்பாடத்திட்ட அலகுகள் மேலோட்டமான தலைப்புகளைக் கொண்டிருக்கின்றன. முதுகலைப் படிப்புக்குக் குறிப்பிட்ட பாடநூல் என்று எதுவும் இல்லை. கருவி நூல்களாகப் பல பட்டியலிடப் பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட தலைப்புக்குப் பல நூல்களைப் படித்துக் குறிப்பெடுக்க வேண்டும் என்பது நோக்கம். அப்படியிருக்க இந்த வினா எந்தத் தலைப்புக்கானது, எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

விவாதத்திற்கு உள்ளான வினாவைக் கேட்ட பேராசிரியர் எப்படிப்பட்டவராக இருப்பார்? சாதியம் ஆழப் பதிந்த மனம் கொண்ட ஒருவரால்தான் இத்தகைய வினாவைக் கேட்க முடியும். இருபதாம் நூற்றாண்டு முழுக்கவும் விடுதலைப் போராட்டத்தினூடாகச் சாதி ஒழிப்புப் போராட்டமும் இணையாக நடந்து வந்திருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளில் நடந்திருப்பது  சாதி ஒழிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பேரெழுச்சி. இவற்றைப் பற்றியெல்லாம் எந்த உணர்வுமற்ற பேராசிரியர், ‘தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று கேள்வி கேட்கிறார். அவருக்கும் வரலாற்று உணர்வுக்கும் தொடர்பிருக்க வாய்ப்பே இல்லை. அவரது கல்வித் தகுதிகள் எவை? உண்மையில் வரலாற்றுப் பேராசிரியர்தானா அவர்?

வினாத்தாள் தயாரிப்புக்குப் பேராசிரியர்களைத் தேர்வு செய்யப் பல்கலைக்கழகம் எத்தகைய விதிமுறைகளைக் கொண்டிருக்கிறது? ஒரே கல்வித்தகுதி கொண்ட பல பேராசிரியர்களின் பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுப்பது யார்? ஒரு வினாத்தாள் தயாரிப்புக்கு இவ்வளவு என்று பணம் தரப்படுகிறது. ஆகவே இப்பணியில் ஈடுபடப் பலர் முன்வருவர். இவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் எனப் பரிந்துரை அழுத்தங்கள் வரவும் வாய்ப்புண்டு. ஒரே வினாத்தாள்தான் தயாரிக்கப்படுமா? பல வினாக்கள் பெறப்பட்டு அவற்றிலிருந்து ஒரு வினாத்தாள் உருவாக்கப்படுமா? அதற்கெனக் குழுக்கள் இருக்கின்றனவா? வினாத்தாள் அச்சுக்குச் செல்லும் முன் அதன் தரத்தைப் பரிசீலிக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா? பல்கலைக்கழகத்தில் வினாத்தாளுக்கெனத் தெளிவான விதிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பின் அவற்றைப் பல்கலைக்கழகம் தம் இணையதளத்தில் வெளிப்படுத்த வேண்டும்.

தற்போது விளக்கம் அளித்திருக்கும் பதிவாளர், ‘இந்தக் கேள்வி பாடத்திட்டத்திலேயே அமைந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் இதே கேள்வி வினாத்தாளில் இடமும் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது’ என்று கூறியுள்ளார். ஒரு வினா பாடத்திட்டத்தில் இருக்க வாய்ப்பில்லை. எந்தத் தலைப்புக்கான வினாவாக இதைத் தேர்ந்துள்ளார் என அவ்வாசிரியரிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டுகளில் இதே வினா இடம்பெற்றிருக்கிறது என்ற பதில் எப்படி சமாதானமாகும்? அப்படியானால் முந்திய ஆண்டுகளின் வினாத்தாள்களையும் கண்டு அவற்றைத் தயாரித்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் வேறொரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று பதிவாளர் சொல்கிறார். தொடர்புடைய ஆசிரியரைக் காப்பாற்றுவதற்கு ஏன் இத்தனை முயற்சி? வினாத்தாள் தயாரித்தவர் அதற்குப் பொறுப்பேற்க இயலாதா? அப்படியானால் யார் பொறுப்பு? ‘வினாத்தாளை நாங்கள் படிக்க மாட்டோம். அது ரகசியம்’ என்றும் ‘தேர்வு நடத்துவதுதான் எங்கள் பொறுப்பு. வினாத்தாள் தயாரிப்பது எங்கள் வேலையல்ல’ என்றும் பல்கலைக்கழகம் சொல்கிறது. 

இப்படியெல்லாம் சொல்வது பொறுப்பற்றதனம். பல்கலைக்கழகத்தின் பணிகள் எவை? பாடத்திட்டம் உருவாக்குவது பல்கலைக்கழகம். வினாத்தாள் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வது பல்கலைக்கழகம். தேர்வு நடத்துவது பல்கலைக்கழகம். தேர்வு முடிவுகளை வெளியிடுவது பல்கலைக்கழகம். சான்றிதழ்கள் வழங்குவது பல்கலைக்கழகம்.  ஆனால் தங்களுக்குப் பொறுப்பில்லை என்று தட்டிக் கழிப்பது எப்படி சரியாகும்? தேர்வாணையர், பதிவாளர், துணைவேந்தர் என எவரும் பொறுப்பேற்க முடியாது என்றால் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் எப்படி நடைபெறுகிறது? யாருமே பொறுப்பில்லை என்றால் வினாத்தாள் உருவாக்கம் அந்தரத்தில் நடைபெறுகிறதா?

பாடத்திட்டத்தில் பிரச்சினை என்றாலும் வினாத்தாளில் சிக்கல் என்றாலும் பல்கலைக்கழகமே பொறுப்பு. இப்படிப் பிரச்சினை வரும்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத அளவு பலவீனமாகவா பல்கலைக்கழக விதிகள் இருக்கின்றன? பாடத்திட்ட அலகுகள், தலைப்புகள், வினாத்தாள் அனைத்தும் தரமற்றுக் காணப்படுகின்றன. பாடத்திட்டத்தில் ‘கிறித்தவ மிஷனரிகளின் நடவடிக்கைகள் - கிறித்தவ மத மாற்றத்திற்கு எதிர்வினைகள்’ என்னும் தலைப்புகள் உள்ளன. இவை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டவை எனத் தெரியவில்லை. வினாத்தாளின் மொழி, தரம் ஆகியவையும் மிக மோசம். முதுகலை மாணவர்களுக்கான வினாத்தாள் இத்தனை பலவீனமாக இருப்பது நம் உயர்கல்வித் தரமின்மையின் வெளிப்பாடு; அனைத்தும் அக்கறையற்ற செயல்பாடுகள்.

வினாத்தாள் தயாரித்த பேராசிரியர்மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய வினாவைக் கேட்டிருப்பது குற்றச்செயலாகக் கருதத்தக்கது. அவர்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இருக்கிறது.  வேறொரு பல்கலைக்கழகத்தையோ கல்லூரியையோ சேர்ந்தவர் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்க வேண்டும். அப்பேராசிரியர் யார் என்று பொதுச்சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். பாடத்திட்டத்தை மறுபரிசீலனைக்கு உட்படுத்தல், வினாத்தாள் தயாரிக்கும் நடைமுறைகளிலும் விதிமுறைகளிலும் மாற்றம் ஆகியவற்றைப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டும்.

இத்தகைய சிக்கல்கள் நேரும்போது அவற்றுக்கு முதலில் பல்கலைக்கழகம் பொறுப்பேற்க வேண்டும். தேர்வாணையரும் பதிவாளரும் பொதுவெளியில் பேசுபவை தர்க்கத்திற்குப் பொருந்தாமலும் அலட்சிய மனோபாவத்துடனும் உள்ளன. துணைவேந்தர் வாயே திறக்கவில்லை. பொறுப்பேற்க மறுக்கும் இப்போக்கு ஆரோக்கியமானதல்ல. உயர்கல்வித் துறை இவ்விஷயத்தில் தொடர்நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்.

கல்வித்துறைகளில் ஏற்படும் பிரச்சினைகளில் அப்போதைக்குச் சமாளிக்கும் தற்காலிக நடவடிக்கைகள், அறிக்கைகள் ஆகியவற்றோடு முடித்துவிட்டுக் கடக்கும் போக்குச் சமீபத்தில் மிகுந்திருக்கிறது. எல்லாவற்றையும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் காண்பது அரசதிகாரத்தின் இயல்பாக மாறிக் கொண்டிருக்கிறது. போராடும் கட்சிகள், மாணவர் அமைப்புகள் இம்மாதிரியானவற்றில் தொடர்ச்சி தருவதில்லை. தம் இருப்பை வெளிப்படுத்தினால் போதும் என்னும் மனநிலை மிகுந்திருக்கிறது. ஏற்கெனவே பல நிலைகளில் சீர்கெட்டிருக்கும் கல்வித்துறை மேலும் மேலும் மோசமாகவே இவையெல்லாம் உதவும். ஆகவே கல்வித்துறையின் ஒவ்வோர் அங்கத்திலும் தலையிட்டுச் சீர்கேடுகளைக்களையும் தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதே எதிர்காலத்திற்கு நலம் பயக்கும்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.