பிப்ரவரி 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      ஸ்ரீநேசன் கவிதைகள் மொழியமைதியைக் கலைத்த கவிஞன்
      சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதையுலகு இருளின் பிரகாசம்
      அயோத்திதாசர குறிப்பிடும் பின்கலை நிகண்டு
    • CASI
      2023ஆம் ஆண்டில் சத்யஜித் ராயின் படங்கள்: ஒரு மீளாய்வு
    • கதை
      வெற்றுப் பூத் தட்டையும் இடுப்பில் வைத்துக்கொண்டு...
      பாட்டுவெயில்
    • உரையாடல்
      அற்புதன் அழகிரி
    • தொடர் 80+
      இலக்கியவாதியின் மொழியியல் பயணம்
    • கலை
      காற்றை எதிர்த்து
    • நேர்காணல்: கே. நல்லதம்பி
      எழுத்து என் பொழுதுகளைப் பொருளுடையதாக மாற்றுகிறது
    • எதிர்வினை
      காந்தியும் தீண்டாமையும்
    • மதிப்புரை
      இயற்பியல் - உளவியல் - வேதியியல்
      தமிழ்ச் சொல்லடைவு: புதிய திருப்பமும் புதிய திசையும்
    • கவிதைகள்
      அனார் கவிதைகள்
    • தலையங்கம்
      கனவு மெய்ப்படும் காலம்
    • பதிவு: சென்னைப் புத்தகக் காட்சி 2023
      நூல்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள்
    • கவிதை
      பிறந்தநாள் வருத்தம் தெரிவித்தலும் தன்னிலை விளக்கமும்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு பிப்ரவரி 2023 எதிர்வினை காந்தியும் தீண்டாமையும்

காந்தியும் தீண்டாமையும்

எதிர்வினை
க. நடராஜன்

காலச்சுவடு ஜனவரி-2023 இதழில் “தீண்டாமை யாத்திரையில் ஒடுக்கப்பட்டோரின் குரல்” தலைப்பில் வந்த கட்டுரை, ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய அம்பேத்கர், காந்தியின் தீண்டாமை ஒழிப்பின் மீதும் தீண்டாதார் மீதான அவருடைய பார்வை, செயல்பாடுகளின் மீதும் வைத்த விமர்சனங்களை முன்வைக்காதது வியப்பையும் வேதனையையும் தருகிறது.

தீண்டாமை ஒழிப்பில் காந்தியின் பங்கு பற்றி தீண்டாமைக்கொடுமையால் இன்னல்கள் பலவற்றை அனுபவித்த அம்பேத்கர் மிகவும் ஏமாற்றமும் வேதனையும் கொண்டார். காந்தி தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களே ஆலயப் பிரவேசம், பொதுக்குளத்தைப் பயன்படுத்துவது போன்ற போராட்டங்களில் தலித் மக்களைத் தாக்க வந்ததைச் சுட்டிக்காட்டி, “இதுதானா நீங்கள் நடத்திய தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தின் வெற்றி? தீண்டாமை அனுசரிப்பவர்கள் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் ஆக முடியாது என்ற ஒரு நிபந்தனையைக் கூட நீங்கள் முன்வைக்கவில்லையே” என்று காந்தியிடம் நேராகவே கேட்டார். பிறகு புனா ஒப்பந்தம் முடிந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முயற்சிகள் முடுக்கிவிடப்படும் முகமாக ‘தீண்டாமை எதிர்ப்பு கழகம்’ (Anti-Untouchability League) ஆரம்பிக்கப்பட்டது. இக்கழகம் பிறகு ‘ஹரிஜன சேவக் சங்கம்’ என மாற்றப்பட்டது. “தீண்டாமைக்கு எதிரான பிரச்சாரமும் பொதுக்கிணறுகள், தர்மசாலாக்கள், சாலைகள், பள்ளிகள், மயானங்கள், இடுகாடுகள் ஆகியவற்றை ஒடுக்கப்பட்டோர் பயன் படுத்துவது குறித்து அமைதியான முறையில் உரிய நடவடிக்கைகள் எடுப்பது இந்தக் கழகத்தின் கோட்பாடு என முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்களிலேயே தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளை ஜாதி இந்துக்களின் மனமாற்றம் வரும்வரை ஒத்தி வைப்பது என்றும், தீண்டத்தகாதவர்களின் கல்வி, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான முயற்சிகளில் முதலில் ஈடுபடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. இது தீண்டாமை ஒழிப்பை காந்தி வெறும் பிரச்சாரத்திற்காக வைத்துக்கொண்டாரே தவிர தீவிர செயல் திட்டமாகக் கொண்டதில்லை என்ற அம்பேத்கரின் வாதத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்தது. ஒடுக்கப்பட்டோரின் மேம்பாட்டுக்கான இதர திட்டங்கள் அவர்களை ‘கருணையினால் கொல்லும்’ முயற்சிகள் என்றும் அம்பேத்கர் கருதினார்.

ஜாதி முறையை ஆதரித்து வந்த காந்தி பின் வர்ணாசிரம முறையைப் பாராட்டிப் பேசினார். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஏனெனில் இரண்டுமே பிறப்பை அடிப்படையாகக் கொண்டதுதான் என்றார் அம்பேத்கர். இதை ஒட்டியே காந்தி தீண்டத்தகாதவர்களின் மாநாட்டின் தலைவராக பேசியதையும் அணுகவேண்டும். “இன்னொரு பிறவி எடுக்கவேண்டுமென்றால் நான் ஒரு தீண்டத்தகாதவனாக பிறக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் படும் துயரங்களிலும் இன்னல்களிலும் அவமானங்களிலும் பங்கேற்கமுடியும்.மிக துன்பமிக்க அந்த வாழ்வு நிலையிலிருந்து என்னையும் மற்றவர்களையும் விடுவிக்க முயற்சி செய்ய முடியும். இதன்பொருட்டே நான் மறுபிறவி எடுத்தால் அது பிராமணனாகவோ வைசியனாகவோ சத்திரியனாகவோ அல்லது சூத்திரனாகவோ இல்லாமல் ஆதி சூத்திரனாக இருக்கவேண்டும்”. “நான் மலம் அள்ளுவதை விரும்பிச்செய்கிறேன். என்னுடைய ஆஸ்ரமத்தில் பதினெட்டு வயது பிராமண பையன். ஆஸ்ரமத்தில் மலம் அள்ளும் வேலை செய்பவன் எப்படி சுத்தமாக அதைச் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்ளும் அளவுக்கு மலம் அள்ளுகிறான். அவன் ஒரு சமூக சீர்திருத்தவாதி அல்ல. அவன் ஆசாரமான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன். ஆஸ்ரமத்தைக் கூட்டுபவன் சரியாக வேலையைச் செய்யவேண்டுமானால் அதைத் தானே செய்து மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செய்கிறான்.” காந்தியின் இந்த உரை அம்பேத்காரை எரிச்சலூட்டியது. “ ஒரு பிராமணன் மலம் அள்ளுவதினால் அவன் மலம் அள்ளும் தீண்டத்தகாதவர்கள் அனுபவிக்கும் சமூக அவலங்களுக்கு ஆளாகப் போவதில்லை. இந்தியாவில் மலம் அள்ளுபவன் அவனுடைய பிறப்பினால் அப்படி ஆக்கப்படுகிறானே தவிர அவன் செய்யும் தொழிலால் அல்ல. அதாவது அவன் அந்தத் தொழிலைச் செய்யவில்லை என்றாலும் அவன் தீண்டத்தகாதவன்தான். மலம் அள்ளுவது ஒரு புனிதமான செயல் என்று அதைச் செய்யமறுக்கும் மற்றவர்களுக்கு காந்தி அறிவுரையாக இதைச்

சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மலம் அள்ளுபவன் செய்வது அவனுக்கும் பெருமை என்று பாராட்டி அதையே அவன் செய்து கொண்டிருக்க வேண்டும், அதைப்பற்றி அவமானம் கொள்ளக்கூடாது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?” என்று அம்பேத்கர் காந்தியாரைச் சாடினார்.

காந்தியார் செய்த எந்த பிரச்சாரமும் சனாதனிகளை மன மாற்றம் செய்யவில்லை. அம்பேத்கர் கருத்துப்படி தீண்டாமை மத நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது. மதத்தலைவர்கள் முன்னின்று, காந்தியார் சொன்னது போல் சாத்திரங்கள் ஜாதியையும் தீண்டாமையையும் அனுசரிக்கச் சொல்லவில்லை எனத் தீவிரமாக மக்களிடையே பரப்புரை செய்தால் ஒருவேளை ஏதாவது வழி பிறக்கலாம்.

(ஆதாரம்; அம்பேத்கர் பற்றிய பிரசுரங்கள், The Essential Writings of B R Ambedkar” edited by Valerian Rodrigues)

            மின்னஞ்சல்: navijya48@rediffmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.