செப்டம்பர் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வகுப்பறைக்குள் சாதியும் வன்கொடுமையும்
      1990களுக்கு முந்தைய சாதிக் கண்டன எழுத்து
    • கண்ணோட்டம்
      நாங்குநேரி சாதிய வன்முறை: சமூக உளவியல்களில் வேர்கொண்ட சாதிய முறை
    • கதை
      வின் பண்ணணும் சார்...
      உற்சாகம்
      மனக்கோட்டையும் ஏமாற்றமும்
    • அஞ்சலி: புலவர் செ. இராசு (1938-2023)
      அரிய ஆவணப் பதிப்பாளர்
    • அஞ்சலி: கத்தர் (1949-2023)
      சரிந்த சமர்க்களம்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர்: பெரியாரைப் போராட அழைத்தவர்
    • விருது
      விருது
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      இரண்டு நூல்கள்
      சூழ்நிலைகளின் சித்திரிப்பு
    • தலையங்கம்-2
      நூல்களை ஒடுக்கும் சக்திகள்
    • தலையங்கம் -1
      மறக்க முடியுமா?
    • கவிதைகள்
      காலை - அறிமுகம்
      இரவுக் காவல்
      மென்மன சைக்கோ- சில செயல்பாடுகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      “நான் எழுதுவது பொது வாசகர்களுக்காகவே”
    • கு. அழகிரிசாமி நூற்றாண்டு
      கு. அழகிரிசாமியும் பாரதியும்
    • அறிக்கை
      மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் களஆய்வு: சில புரிதல்கள் சில வேண்டுகோள்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2023 கவிதைகள் காலை - அறிமுகம்

காலை - அறிமுகம்

கவிதைகள்
எம். யுவன்

ஓவியம்: மு. நடேஷ்

 

காலை - அறிமுகம்

முன்னறியாத ஊர். 
அந்நியத் தெருவின் அதிகாலை 
புத்தம் புதிதாய் இருக்கிறது.   
எதிர்வீட்டு வேலியில் பூத்த
பூசணிப் பூவின் இதழ்களில் 
என் பதின்பருவ நாளொன்று 
மீண்டும் மலர்வதைப் பார்த்தேன். 

அவ்வளவுதான்.தெரியாத ஊர்
தெரிந்ததானது. அந்நியத் தெரு
என்னுடையதானது. 
வேளையும் வெளிச்சமும்கூட
நலமா என்றன.

கழற்றிய சட்டை மாதிரி
முதுமையைப் புரட்டிப் போட்ட
பூசணிப்பூவுக்கு நன்றிசொல்ல முனைந்தேன்.
மிகச் சரியாய் அந்நேரம்
எச்சில் இலையில் 
தேங்கிய மழைநீர் சமுத்திரமாய்த்
துளும்பியது. வால் மட்டும் அசைத்து
நீந்திய திமிங்கிலம் என்னை நோக்கிக்
கண்ணடித்தது. உதட்டைக் குவித்துச் சீட்டியடித்தபடி
மேகங்களை ஒட்டடைக் குச்சியால் அகற்றி
ஆகாயத்தைத் துடைப்பவன்
புன்னகைத்துப் போனான். 

அந்தக் கணத்தில்தான்
தெரிந்தவை அனைத்தும் தெரியாததாகி,
என்னுடைய நாள் எனதின்றிப் புரண்டு,
நான்கூட நானின்றி
ஆகியிருக்க வேண்டும்...

காலை - போதலும் வருதலும்

நியமம் தவறாது சடங்குகளை ஈடேற்றும்
ஆத்திகனின் சிரத்தையுடன்
தலைவிதியை நொந்தபடி நாளைக் கழிக்கும்
வாழ்க்கைத்துணையின் சிந்தையுடன்
எங்கோ உயரத்தில் நூல் முனையில் ஒட்டிய
பட்டத்தை ஆனந்திக்கும் சிறுவனின் குதூகலத்துடன்
விலையுயர்ந்த ஜாடியைக் கைதவறி உடைத்த
பணிப்பெண்ணின் பதற்றத்துடன் 
தலைப்பிரசவம் நடத்திமுடித்த
பெண்மருத்துவரின் நிறைவுடன்
தீராத தாய்ப்பாலை முழுக்கத் தீர்க்காத
சிசுவின் ஏக்கத்துடன்
வாரிவாரி வழங்கியும் புண்ணியம் பற்றி
விசனமுறும் தனவந்தனின் ஆற்றாமையுடன்
மதிலுக்கு மறுபுறம் குதித்துவிட்ட
ஆயுள்கைதியின் பரபரப்புடன்
தெருத்தெருவாய் அலைந்தும் 
திருவோடு நிறையாத யாசகனாய்
பேழைக்குள் நீட்டி நிமிர்ந்த
சடலமெனப் பற்றற்று

அன்றாடம் காலைநடை போகிறேன்
வியர்த்து விறுவிறுத்துத் திரும்புகிறேன்
வாய்ப்பு கிடைக்குமானால்
பூமியின் விளிம்புக்கு அப்பாலும் 
ஒரு கிலோமீட்டர் போகத்தான் ஆசை. ஆனால், 
ஒவ்வொரு முறை போகும்போதும்
வீடு திரும்பும்போதும் 
குழம்பத்தான் செய்கிறேன்
       இன்றினுள் நுழைந்து நடந்தேனா,
       இன்றிலிருந்து விலகி நகர்ந்தேனா?

காலை - போட்டியாளர்கள்

பயிற்சியில் ஈடுபடும்தடகளவீரன்
தனியாய்த்தான் ஓடுகிறான் - ஆனாலும்
தனியே இருப்பதில்லை. செவிக்குக் 
கேட்காத விநாடிமுள்ளின் ஓசையும்
கண்ணுக்குத்தெரியாத இலக்கின் காட்சியும்
அல்லும் பகலும் துரத்தும் கனவின் அரற்றலும்
உடன் ஓடுகின்றன. 

வரிசை கட்டிய போட்டியாளர்கள் மத்தியில்
தனியாய் இருக்கிறான் - மிகத் தனியாய்.
சமிக்ஞையொலி தனக்கு மட்டுமே கேட்கக்
காத்திருக்கிறான். தன்னுடன் மட்டும்
போட்டியிட்டு ஓடுகிறான். அளந்து நிர்ணயித்த
எல்லைக்கோடு அளக்க முடியாத் தொலைவில்.
கோட்டை நெருங்க நெருங்க
தன்னைவிட்டு விலகுகிறான். வெற்றிக் களிப்பை
ஆரவாரிக்கும் கூட்டத்தை
ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கும் பயிற்சியாளனை
பதக்கத்தை ஏந்தக் கழுத்தை நீட்டும் தன் உருவத்தை

நீங்கி வெகு தொலைவு சென்று
திரும்பிப் பார்க்கிறான். 
சோகையான முன்மதியப் பொழுது
தானும் திரும்பிப் பார்க்கிறது. பதார்த்தம் வெந்தபின்
வெளியேறும் ஆவிபோலப்
புகைவடிவம் கொள்ளும் ஒரு நாளில்
இன்னமும் ஓடிக்கொண்
டிருக்கிறான் அவன். நிற்காத ஓட்டம்.
சென்ற நாளையும் இந்த நாளையும்
ஒரே சமயத்தில் காலிசெய்ய
அவனுடன் போட்டியிட்டு
தன்னந்தனியே
எதிர்ப்புறம் சுழல்கிறது பூமி.

 மின்னஞ்சல்: writeryuvan@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.