செப்டம்பர் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வகுப்பறைக்குள் சாதியும் வன்கொடுமையும்
      1990களுக்கு முந்தைய சாதிக் கண்டன எழுத்து
    • கண்ணோட்டம்
      நாங்குநேரி சாதிய வன்முறை: சமூக உளவியல்களில் வேர்கொண்ட சாதிய முறை
    • கதை
      வின் பண்ணணும் சார்...
      உற்சாகம்
      மனக்கோட்டையும் ஏமாற்றமும்
    • அஞ்சலி: புலவர் செ. இராசு (1938-2023)
      அரிய ஆவணப் பதிப்பாளர்
    • அஞ்சலி: கத்தர் (1949-2023)
      சரிந்த சமர்க்களம்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர்: பெரியாரைப் போராட அழைத்தவர்
    • விருது
      விருது
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      இரண்டு நூல்கள்
      சூழ்நிலைகளின் சித்திரிப்பு
    • தலையங்கம்-2
      நூல்களை ஒடுக்கும் சக்திகள்
    • தலையங்கம் -1
      மறக்க முடியுமா?
    • கவிதைகள்
      காலை - அறிமுகம்
      இரவுக் காவல்
      மென்மன சைக்கோ- சில செயல்பாடுகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      “நான் எழுதுவது பொது வாசகர்களுக்காகவே”
    • கு. அழகிரிசாமி நூற்றாண்டு
      கு. அழகிரிசாமியும் பாரதியும்
    • அறிக்கை
      மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் களஆய்வு: சில புரிதல்கள் சில வேண்டுகோள்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2023 அறிக்கை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் களஆய்வு: சில புரிதல்கள் சில வேண்டுகோள்கள்

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் களஆய்வு: சில புரிதல்கள் சில வேண்டுகோள்கள்

அறிக்கை

• சாதியப் படிநிலையில் தாங்கள் மேல் தட்டில் உள்ள நிலையில் தங்களுக்கு எதிராக ஒரு தாழ்த்தப்பட்ட சாதி மாணவன், அதுவும் இதுகாறும் அடங்கிக் கிடந்த ஒருவன் தங்களுக்கு எதிராக மனு கொடுப்பதா என்ற சாதிய ஆதிக்க மனநிலையே இந்தக் கோரத் தாக்குதலின் ஆணி வேர்.

 • பள்ளி மாணவர் மீதான சக மாணவர்களின் தாக்குதல் என்பது சாதி உணர்வுகள் சிறுவர்கள் மத்தியில் எவ்வளவு கூர்மை அடைந்துள்ளன என்பதை உணர்த்துகின்றது.

 • இந்த வெட்டுச் சம்பவம் ஏதோ கோபத்தில் எதிர்வினையாக நிகழ்த்தப்பட்ட சம்பவம் அல்ல. மிகவும் நிதானமாகத் திட்டமிடப்பட்டு, அதுவும் மூவரும் ஒவ்வொருவராக உடலின் வெவ்வேறு பகுதியில் வெட்டியுள்ளனர். இதில் உயிர் போகாமல், ஆனால் முற்றிலும் செயலிழந்து போக வேண்டும் என்ற நோக்கம் புரிகிறது.

 • ஆதிக்கச் சாதியினரின் பண்பாட்டு ஆதிக்கம் வன்முறை தவிர்த்த ஒன்றாகவே அப்பகுதியில் வெகுகாலம் இருந்துவந்த நிலையில், தற்போது இளைய தலைமுறை ஆயுதம் கொண்டு தாக்கி அதை நிலை நிறுத்த முயல்வதின் முதற்கட்டமாக இதைப் பார்க்கின்றோம்.

 • கடந்த 20 ஆண்டு காலமாகக் குறிப்பிட்ட அதீத சம்பவங்கள் எதுவும் நடந்திராத நிலையில் தற்பொழுது தலித் மாணவன் தாக்கப்பட்டு இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தலித் சமூக இளைஞர்கள் நகரங்களுக்குச் சென்று பணம் ஈட்டி முன்னேற்றம் காண்பதும் ஆதிக்கச்சாதியினர் இடையே ஒரு வெறுப்புணர்வை வளர்த்திருக்கிறது.

 • நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் மாண்புமிகு ஜெயலலிதா அரசால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டு, தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது. எனவே அந்தப் பகுதியில் நிலம் சார்ந்த உடைமைகளின் தேவை அதிகரித்து வருகின்றது. தலித் மக்களிடம் இருக்கின்ற உடைமைகளை அவர்களது குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்கிற நீண்டகாலத் திட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

 • மதவாதக் கட்சிகள் மக்களை மத அடிப்படையில் ஒன்று சேர்க்க வேண்டுமென்றால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாதி அமைப்புகளின் துணை கொண்டு மக்களை ஒன்றுதிரட்ட வேண்டியுள்ளது. அதனால் இதுவரை சற்று இறுக்கம் தளர்ந்து காணப்பட்ட சாதியப் படிநிலை உறவுகள் மீண்டும் இறுக்கமடைகின்றன. சாதி அமைப்புகள் மீண்டும் தங்களைச் சாதி அடையாளத்தில் ஒன்றிணைத்துக்கொள்வதும் அதன் வெளிப்பாடாக சாதியப் பாகுபாடுகளும் சாதிய முரண்பாடுகளும் அதிகமாக வெளிப்படுவதையும் காணமுடிகின்றது.

 பரிந்துரைகள்

 • இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்தது என்ற அணுகுமுறையை விடுத்துச் சம்பவத்திற்கு முன்னே சின்னத்துரையின் வீட்டிற்கு வெட்டிய மாணவனின் பாட்டியும் சகோதரரும் ஏன் அங்கே வந்தார்கள், இரண்டு அடி நீளமுள்ள அரிவாள் அந்த மாணவனின் கையில் எப்படிக் கிடைத்தது, மூன்று பேரும் மாறி மாறித் தாக்கும் அளவிற்கு எப்படித் திட்டமிட்டார்கள், இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் யாரெல்லாம் என்ற கோணத்தில் காவல்துறை தனது விசாரணையைத் தொடர வேண்டும்.

• பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை உடல் நலம் பெறுவதற்குச் சில காலம் ஆகக்கூடும். அப்படியே நலம் பெற்றாலும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது. ஒரு இளைஞனின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக இந்த வன்முறை அழித்துவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே அரசு சின்னத்துரைக்கு வரும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுத எல்லாவித வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, அவனுக்கு அவன் விரும்பும் மேற்படிப்பிலும் சேருவதற்கு வகைசெய்யும் சிறப்பு ஆணை பிறப்பிக்கவேண்டும்.

• சின்னதுரையின் தங்கை சந்திரா செல்வியின் மேற்படிப்புக்கும் அரசு சிறப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்.

• சின்னத்துரைக்கு ஈட்டுத் தொகையாக 25 இலட்சம் வழங்க வேண்டுகிறோம்.

கல்வியில் தேவை

• நல்லொழுக்க வகுப்புகளும் விளையாட்டுக்கான வகுப்புகளும் பள்ளிகளில் அரிதாகிவிட்டன. அனைத்து சமூக மாணவர்களும் இணைந்து பழகுகின்ற வகையில் விளையாட்டுத்துறை, தேசிய சேவை திட்டம், சாரணர் பயிற்சி, தேசிய மாணவர் படை, பசுமைப்படை போன்ற திட்டங்கள் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்பட வேண்டும்.

• பயிற்சி பெற்ற ஆற்றுப்படுத்துநர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு நேர ஊழியர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதி பள்ளிகளுக்குத் தொடர்ந்து சென்று மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தரவேண்டும்.

• சாதிய அடையாளங்களைப் பள்ளிக்குள் எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது.

• பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களைப் பரிசீலிப்பதற்குத் தனிக் குழுக்கள் அமைப்பது போன்று சாதியப் பாகுபாடு வெளிப்படும் நிகழ்வுகளைக் கண்காணிக்கவும் ஆரம்பத்திலேயே களைவதற்கும் சிறப்பு குழுக்கள் கல்வி நிலையங்களில் அமைக்கப்படவேண்டும்.

 பிற ஆலோசனைகள்

• பட்டியலின, பழங்குடி மக்களுக்கான சிறப்புத் துணைத் திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் மீண்டும் மத்திய அரசிற்குத் திருப்பி அனுப்பப்படுவதைக் கைவிட்டு, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, கல்வி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

 • பட்டியலின, பழங்குடி மக்களின் சொத்துக்கள் ஆதிக்கச் சாதியினரால் அபகரிக்கப்படாமல் காக்கப்பட வேண்டும்.

• சமூக வலைதளங்களில் சாதியப் பெருமை பேசும் கருத்துக்களைப் பரப்புவோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதோடு தடைகளுக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கப்பட வேண்டும்.

கள ஆய்வுக் குழுவினர்

பேராசிரியர் இரா. முரளி, தேசிய துணைத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்

வழக்கறிஞர் ஜான் வின்சென்ட், மாநில பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

எழுத்தாளர் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்,

பேராசிரியர் சாமுவேல் ஆசீர் ராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்,

திரு. ஊசிக்காட்டான், மாவட்டத் தலைவர், மத்திய மாநில எஸ்சி/எஸ்டி அரசு ஊழியர் கூட்டமைப்பு, திருநெல்வேலி,

திரு. ஜெகநாதன், தலித்திய ஆய்வாளர்,

திரு. மதிகண்ணன், எழுத்தாளர்

திரு. கலீல் இரகுமான், சமூகச் செயல்பாட்டாளர், தென்காசி

PUCL அறிக்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்.

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.