செப்டம்பர் 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      வகுப்பறைக்குள் சாதியும் வன்கொடுமையும்
      1990களுக்கு முந்தைய சாதிக் கண்டன எழுத்து
    • கண்ணோட்டம்
      நாங்குநேரி சாதிய வன்முறை: சமூக உளவியல்களில் வேர்கொண்ட சாதிய முறை
    • கதை
      வின் பண்ணணும் சார்...
      உற்சாகம்
      மனக்கோட்டையும் ஏமாற்றமும்
    • அஞ்சலி: புலவர் செ. இராசு (1938-2023)
      அரிய ஆவணப் பதிப்பாளர்
    • அஞ்சலி: கத்தர் (1949-2023)
      சரிந்த சமர்க்களம்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர்: பெரியாரைப் போராட அழைத்தவர்
    • விருது
      விருது
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • மதிப்புரை
      இரண்டு நூல்கள்
      சூழ்நிலைகளின் சித்திரிப்பு
    • தலையங்கம்-2
      நூல்களை ஒடுக்கும் சக்திகள்
    • தலையங்கம் -1
      மறக்க முடியுமா?
    • கவிதைகள்
      காலை - அறிமுகம்
      இரவுக் காவல்
      மென்மன சைக்கோ- சில செயல்பாடுகள்
    • நேர்காணல்: ராமச்சந்திர குஹா
      “நான் எழுதுவது பொது வாசகர்களுக்காகவே”
    • கு. அழகிரிசாமி நூற்றாண்டு
      கு. அழகிரிசாமியும் பாரதியும்
    • அறிக்கை
      மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் களஆய்வு: சில புரிதல்கள் சில வேண்டுகோள்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2023 மதிப்புரை சூழ்நிலைகளின் சித்திரிப்பு

சூழ்நிலைகளின் சித்திரிப்பு

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது

இருசி
(சிறுகதைகள்)
ஸர்மிளா ஸெய்யித்

வெளியீடு: 
கருப்புப் பிரதிகள்
293, அகமது வணிக வளாகம்,
2ஆம் தளம், ராயப்பேட்டை, 
சென்னை - 600 014
பக். 176 

ரூ. 175

ஸர்மிளா ஸெய்யித் தன் படைப்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கின்ற களங்களும் பாத்திரங்களும் ஆசுவாசத்தைத் தர மறுப்பவை. அவர் கோபக்காரர். அவரைத் தேடிவந்து கருக்களும் கற்பனைகளும் வந்துவிழுகின்றன; எனவே பதற்றமான மனநிலையோடுதான் நாம் அவரின் படைப்புகளை நெருங்குகிறோம். ஏற்கெனவே அவருடைய படைப்புகள் போன பாதையில்தான் ‘இருசி’ சிறுகதைத் தொகுப்பும் போகிறது.

இளம்பருவத்தில் தானடைந்த அனுபவங்களை இத்தொகுப்பின் பல கதைகளில் பேசுகிறார். மதம் தன் சமூகத்தை இறுக்கிப் பிடிக்கிறது; அதைத் தழுவிச் செல்லுவோருக்குள்ள பதற்றம் அல்லது ஆணவம் அல்லது அதிகாரம் இவைதாம் சமூகத்தில் பின்னடைவைக் கொண்டு செலுத்துகின்றன. மதத்தின் பேரால் ஒருவர் சொல்லும் கருத்து ஓர் ஆணையாக மாறுவது மனித குலத்தின் பெரும் துயரம்; அது மத இயல்பில் அப்படியாக இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால் தடைகள் இறுக்கமாய் விழுந்துவிடுகின்றன. ஸர்மிளா இத்தகைய சூழ்நிலைகளின் சித்திரிப்பாளர்.

இக்கதைகளில் நசுக்கப்பட்டுள்ள பெண்களின் அவலக் குரல் கேட்கின்றது; அதுவும் ஸர்மிளா போன்ற பெண்களுக்குத்தான் கேட்கின்றது. இக்கதைகளின் மைய இழையாக இந்த ஒன்றே தென்படுகிறது. அப்படிப்பட்டவர்களின் பிரதிநிதியாக அவர் தன்னைத் தானே உருவாக்கிக்கொண்டுள்ளார். மைய நிலையிலிருந்து வாசிக்கின்ற ஓர் ஆணுக்கு இதில் முரண்பட பேரளவில் ஏதுமில்லையென்றே சொல்லலாம்; இருந்தாலும் மேலே சொல்லியிருக்கிற காரணங்களுக்கு அப்பாலும் நாம் வியக்கக் கூடிய கதைகள் உள்ளன.

யதார்த்தமான கதைகளுக்கு மத்தியில் ‘முதுசம்’ மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது. நாயகி அலேஷா திருமணமாகிவிட்ட சூழலிலும் தன் வயதுக்கு மீறிய ஒருவரை விரும்புகிறாள். வயதான பெரியவரும் அலேஷாவைச் சேர்ந்தடைய நாட்டம் கொள்கிறார். அலேஷாவின் விருப்பம் சரிதானா என்ற கேள்வி எழாமலில்லை. அவளின் மனப்போக்கிற்குக் காரணமும் இல்லாமலில்லை. காதலின் தெய்வீக உணர்ச்சிக்குள் அலேஷாவும் பெரியவரும் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். தன் வாழ்க்கைக் கடன்களைத் தன் வாரிசுகளுக்கு முழுவதுமாக அர்ப்பணித்தபின் பெரியவரின் விருப்பத்திற்கும் தடைசொல்ல முடியவில்லை. அவர்கள் இணைவது எப்படியென்கிற சூட்சுமத்தை அழகாக விவரிக்கிறார் ஸர்மிளா.

’அக்னிக்குஞ்சு’ கதையை ஒரு புரட்சிக்காரியான ஸர்மிளாவிடம் நாம் எதிர்பார்த்திருக்கமாட்டோம். அகவைமுதிர்ந்த பெண் கருவுறுவதும் அவருடைய மக்கள் மட்டுமல்லாமல் சமூகமே அதை முகச்சுழிப்போடு பார்ப்பதும் கதையின் ஒரு போக்கு; மறுபோக்கில் குழந்தை பெறுவதிலுள்ள இயல்பான சிக்கல்கள்; இரண்டு உயிர்களில் யாராவது ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும்; மருத்துவர்களே கைவிட்ட நிலையில் அதிசயமாகத் தாயும் சேயும் உயிர்பிழைக்கிறார்கள். இந்த இடத்தில் கதாசிரியர் வர்ணிக்கும்முறை அவருடைய பங்காளிகளையும் மூச்சுமுட்டச் செய்யும்.

தன்னுடைய படைப்புவெளியில் ஸர்மிளா சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார். சமூகம், தான் வாழக்கூடிய விதம் சரிதானா என்று பரிசோதிப்பதற்குப் பெண்களை மட்டுமே கருவிகளாகக்கொண்டு அளவீடு செய்கிறது; இவற்றிலிருந்து ஆண் இனம் ஏன் விலக்கிவைக்கப்படுகிறது என்கிற கேள்விக்கு இன்னும் விடைகாணப் படவில்லை. பின்நவீன யுகத்தில் பெண்கள் இதன் காரணமாகவே தமக்கான படைப்புவெளியையும் படைப்பு முறையையும் உருவாக்கிக்கொள்கிறார்கள். இதுதான் ஸர்மிளா ஸெய்யித்தின் வினா. அதற்கான போராட்ட முறையாகத் தன் எழுத்துலகை அவர் கையாள்கிறார்.

ஆனாலும் தன் கருத்துகளுக்கேற்ப கதைகளை எழுத யத்தனிக்கும்போது சிறகுகளின் வலிமை குன்றிவிடுகிறது. வேற்றுக்கிரக வாசிகள், இருசி, பெய்யெனப் பெய்யும் மழை, பத்ரகாளி அருட்காப்பு போன்றவை அத்தகையவை. சில கதைகளின் மையம் ஒன்றாகவும் நகர்வு வேறொன்றாகவும் அமைந்துள்ளன.வரும்காலங்களில் இதுபோன்ற கதைகளின் அழகியல் உணர்வையும் கவனத்தில்கொள்வது நல்லது.

   மின்னஞ்சல்: kalanthaipeermohamed@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.