உணவின் மீதும் வாழ்க்கைமுறையின் மீதும் கவனம் செலுத்தியே ஆக வேண்டும்
சிவராமன் நவீன அறிவியலின் கண்ணோட்டத்தோடு அணுகுகிறார். தஞ்சை சரபோஜி சரஸ்வதி மகால் நூலகத்தில் ஓலைச்சுவடிகள் வாசிப்புப் பயிற்சியில் சான்றிதழ் பயிற்சி பெற்றவர். 2001முதல் 2010வரை ‘ஹெல்த் இந்தியா’ என்ற தன்னாார்வ அமைப்பின் இணை இயக்குநராகச் செயல்பட்டார். 2020 ஏப்ரலில் தமிழக அரசு கொரானா நோய்த் தடுப்புப் பணிக்காக நியமித்த நோய்த் தடுப்புக் குழுவின் 25 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். சித்த மருத்துவம், மரபுணவு ஆகியவை குறித்துப் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஆய்வு உரை நிகழ்த்தியுள்ளார். கடந்த மே மாதம் தன்னுடைய சொந்த ஊரான சாத்தான்குளத்தில் குலதெய்வத்தின் கோயில் திருவிழாவுக்காகச் செல்லும் வழியில் நாகர்கோவில் காலச்சுவடு அலுவலகத்துக்கு வருகைபுரிந்தார். அப்போது அவரைச் சந்தித்து விரிவாக உரையாடியதன் தொகுப்பு இது.