சிறகுகள் கொண்ட பெண்
ஓவியங்கள்: செல்வம்
தமிழில்: கௌரி கிருபானந்தன்
“உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? போயும் போயும் லதாவையா கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய்? காதலும் பைத்தியமும் ஒன்றுதான் என்று சொல்வார்கள். ஆனால் கல்யாணமும் பைத்தியமும் ஒன்றுதான் என்று சொல்லவில்லை.” சங்கர், முரளியைக் கேலி செய்தான்.
“...”
“லதாவைப் பற்றி ஒரு விஷயம் சொல்லட்டுமா. வருத்தப்பட்டுக்கொள்ளாதே. காதலுக்காக வலையில் சிக்கிக்கொண்டுவிட்டாயோ என்பதால் சொல்கிறேன்.” முரளியின் கண்களுக்குள் ஊடுருவுவதுபோல் பார்த்தான் சங்கர்.
முரளியின் கண்களில் ஆர்வம் எதுவும் தென்படவில்லை. பேச்சை நீடிப்பதற்குச்