ஆசீர்வதிக்கப்பட்டது நம் வீடு
1. ஆசீர்வதிக்கப்பட்டது நம் வீடு
அது கப்பல்கள் செய்து பார்த்திருந்த பருவம்
தெருவில் ஓடும் மழைவெள்ளம்
ஒரு நதியின் அனுபவத்தை
அளித்தபடியே ஓடியது
மழையில் நனைவது
நனையாமல் இருப்பது
இரண்டுமாகவே இருந்தது வாழ்க்கை ஒழுகும் வீட்டைப் பார்த்துப் போடும்
பரிதாப நாடகங்கள்
அப்போது இல்லை
பாத்திரங்களில் விழும் மழைச்சத்தம்
வீட்டை நிரப்பிக்கொள்ளும்
ஓலையிலிருந்து ஒழுகும் மழைக்கோடுகள்
தாழ்வாரத் திண்ணையில் அமர்ந்து
பழைய திரைப்படங்களைப் பார்க்கும் நினைவைத் தெளித்தன
மழைக்குளிரில் அம்மாவின் அருகில் ஒடுங்கி அமர்ந்ததைப்போன்ற பாதுகாப்பான இடம்
வேறேதுமில்லை இப்போதும்
நனைந்தபடியே வாங்கிவரும்
காபியும் சர்க்கரையும்
மரகதம் சின்னாம்மா கொடுத்தனுப்பும்
செவுல்பசுவின் சீம்பா