நாடற்ற இந்தியர்களும் இலங்கை அகதிகளும்
நாடற்ற இந்தியர்களும் இலங்கை அகதிகளும்
தொ. பத்தினாதன்
அகதிகளின் நிலையைவிடக் கவலைக் கிடமானது நாடற்றவர்களின் நிலை. உலகம் முழுக்கச் சுமார் ஒரு கோடிக்கும் மேலான நாடற்றவர்கள் இருப்பதாக ஐநா கணக்கிட்டிருக்கிறது. நாடற்ற ஒருவருக்கு அவர் தஞ்சமடைந்திருக்கும் நாட்டின் குற்றவியல் சட்டம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். அந்நாட்டின் ஏனைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும். பெரும்பாலான நாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்வதில்லை.
ஒப்பந்தங்கள் மூலமாகவும் நீதிமன்றத் தீர்ப்பின்படியும் புதிய சட்ட உருவாக்கத்தின்போதும் நாடுகளின் எல்லைகள் பிரிக்கப்படும்போதும் சட்டவிரோதக் குடியேறிகளுக்