தேயிலைப் பை தேநீர்
தேயிலைப் பை தேநீர்
சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் தமிழ் எழுத்துக்கள்
பழ. அதியமான்
2021 நவம்பர் மூன்றாவது வாரத்தில் ஒருநாள், கண்ணன் தொலைபேசி னார். “சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘பத்திகள்’ பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன” என்றார். “தமிழுக்கு இவ்வளவு நூல்களை அறிமுகப்படுத்தும் ஒரு பத்தியைப் பிடிக்காமல் இருக்குமா” என்று என் வியப்பை வெளியிட்டேன். “அவரது இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பேச முடியுமா” என்றார். செய்துகொண்டிருக்கும் வேலை தடைப்படுமே என்று சற்றுத் தயங்கினேன். ‘புத்தகத்தை அனுப்புகிறேன், படித்துவிட்டுச் சொல்லுங்கள்