கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ச் சிறுகதை
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்ச் சிறுகதை
சுப்பிரமணி இரமேஷ்
‘சிறுகதையே படைப்புச் சக்தியின் கடைசிக் குழந்தை. படைப்புச் சக்தி அதற்குப்பின் இன்றுவரையிலும் கருத்தரிக்கவில்லை’
- சுந்தர ராமசாமி
வ.வே.சு. ஐயரின் ‘மங்கையர்க் கரசியின் காதல் முதலிய கதைகள்’ (1917) தமிழில் பிரசுரமான முதல் சிறுகதைத் தொகுப்பென வைத்துக்கொண்டால், தமிழ்ச் சிறுகதையின் வரலாறு நூறாண்டுகளைக் கடந்துவிட்டது. இந்த நூறாண்டுகளில் தமிழ்ச் சிறுகதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு பத்தாண்டுகாலச் சிற