‘முறி, எல்லாவற்றையும் முறி’
‘முறி, எல்லாவற்றையும் முறி’
ஸர்மிளா ஸெய்யித்
அம்பைக்கு சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டதும் சமூக வலைத்தளங் களில் ஒரே கொண்டாட்டமயம். திருவிழாவை வேடிக்கை பார்க்கும் சிறுமியைப்போல இவற்றையெல்லாம் அம்பை பார்த்துக்கொண்டிருப்பார் என்று என் மனத்தில் ஓர் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
மாற்றங்களின் பகுதியாக இருக்க விரும்புகிறவர்கள், தாம் கேலி செய்யப்படும் காலங்களிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் காலங்களிலும் அகத்தாலும் புறத்தாலும் போராடுகிறார்கள். இது அதிக நெகிழ்வுத்தன்மையையும் திறந்த மனத்துடன் எதையும் அணுகிச் சிந்திக்கும் பண்பையும் அளித்து ஒருவரின் குணாதிசயங்களை உயர்த்திவிடும். அம்பையும் இவ்வா