பேசும் வகுப்பறை
பேசும் வகுப்பறை
மு. குலசேகரன்
ஓவியங்கள்: மணிவண்ணன்
எதிரிலிருந்த கல்லூரிக் கட்டடம் பெரும் மசூதியைப்போல் தோன்றியது. அதன் கோபுர உச்சிகள் வான் நீலத்தைத் தொட்டுக்கொண்டிருந்தன. வளைந்த விதானங்களுடன் இருந்த நூற்றுக்கணக்கான சாளரங்கள் கண்களைப் போல் விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. முகப்பையொட்டியிருந்த அசோக மரங்கள் மூன்று மாடி உயரத்துக்கு நின்றிருந்தன. முட் கம்பிகள் பதிக்கப்பட்ட சுற்றுச் சுவர் கண்ணெட்டும் தூரம் வரை நீண்டிருந்தது. பிரமாண்டமான இரட்டை வாயிற் கதவு பாதி மட்டும் திறந்திருந்தது. மேலே மூன்றுமொழிகளில் எழுதப்பட்ட ஆரவடிவ பெயர்ப்பலகை. சில மாணவர்களும் ஆசிரியர்களும் வேகமாக உள்ளே போய் வந்துகொண்டிருந்தார்கள். முன்னால