‘மியாடீ’
‘மியாடீ’
பெருமாள்முருகன்
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
பேசுவதற்கான விஷயம் தீர்ந்து வெறுமை அழுந்தப் படர்ந்த நாளொன்றில் அவர்கள் கவனத்தைப் பூனை ஈர்த்தது. இத்தனை நாளும் வீட்டுக்குள்ளும் வெளியிலும் சுற்றிக்கொண்டிருந்த பூனையாக அது இல்லை. புத்தொளி கொண்டு துலங்கும் ஜீவனாகத் தெரிந்தது. ‘மியாடீ’ என்று அழைக்கும் போது தலையைத் திருப்பி அது பார்க்கும். கண்களில் தீ பளீரிடும். அதன் கத்தல் வயலின் இசை போலிருந்தது. கண்ணும் காதும் புதிதாகி விட்டன.
தொற்றுக்காலப் பொதுமுடக்கம் அறிவித்த போது இப்படி நீளும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சில நாட்கள், ஓரிரு வாரங்கள்.