ஜாலியன்வாலா பாக் படுகொலை: பாரதி மௌனம் சாதித்தாரா?
ஜாலியன்வாலா பாக் படுகொலை:
பாரதி மௌனம் சாதித்தாரா?
ய. மணிகண்டன்
வெசாமிநாத சர்மாவின் ‘ஏப்ரல் 1919 (அ) பஞ்சாப் படுகொலை’ நூலுக்கு 1920இல் எழுதிய முகவுரையில், உலகையே உலுக்கிய ஜாலியன்வாலா பாக் படுகொலை நிகழ்வை நாடகம், புராணம், கீர்த்தனம், பரணி, சிந்து, மாலை, ஏற்றப்பாட்டு என எல்லா இலக்கிய வடிவங்களிலும் படைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார் திரு.வி.க.
கோரிக்கை பெரிய அளவில் நிறைவேறிய தாகத் தெரியவில்லை.
சமகாலத்தில் வாழ்ந்த பாரதியின் பாடல்கூட இதுகுறித்து நமக்குக் கிடைக்கவில்லை. இறுதிக்காலச் சென்னை வாழ்க்கையில் பாரதி அதிகமாகக் கவிதைகள் புனையவில்லை. கட்டுரைகள் தீட்டுவதிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்து வதிலும் காட்டிய ஈடுப