சுயமரியாதை
சுயமரியாதை
வண்ணநிலவன்
ஓவியங்கள்: செல்வம்
பழனி கம்பௌண்டர்தான் சுற்றுப்பட்டியிலுள்ள நாலைந்து ஊர்களுக்கு டாக்டர். தெக்கூர், சக்கரப்பேரி, செவந்தான் குளம், கீழூருக்கெல்லாம் அவர்தான் கைகண்ட மருத்துவர். அவர் கையைப் பிடித்து நாடி பார்த்து மருந்து கொடுத்தால் நோய் பறந்துபோய்விடும் என்று அந்த வட்டாரமே நம்பியது. ஆறு கிலோமீட்டர் போனால்தான் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியைப் பார்க்கலாம்.
பழனி கம்பௌண்டர் தூண்டில் குடியில் இருந்தார். வெறும் வயிற்றில் காபியை மட்டும் குடித்துவிட்டு சைக்கிள் கேரியரில் தனது மருந்து தோல்பையை கட்டி வைத்துக்க