
ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘கதையல்ல வாழ்க்கை’ மேடை நிகழ்த்தும் மாயம்
சமகால யதார்த்தங்களைக் கலாபூர்வமாகப் படைப்பில் வெளிப்படுத்தும் கலைஞர்களில் ஒருவர் இமையம். சாதியச் சூழல், பொதுச் சமூகச் சூழல், அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்கள், நவீன வாழ்வின் தாக்கங்கள் என இவருடைய கதைக்களம் விரிந்து பரந்தது. இமையத்தின் எழுத்தைக் குறிப்பிட்டதொரு சமூகப் பின்புலத்தை வைத்து அடையாளப்படுத்துவது அவருடைய கதையுலகின் பன்முகத்தன்மையை அறியாத அல்லது அங்கீகரிக்க விரும்பாதவர்களின் வழக்கம். இந்நிலையில் சமகாலத்தின் முக்கியமான நாடக ஆளுமைகளில் ஒருவரான ப்ரஸன்னா ராமஸ்வாமி அண்மையில் மேடையில் நிகழ்த்திய ‘கதையல்ல வாழ்க்கை’ என்னும் நாடக வடிவம் இமையத்தின் படைப்புலகின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
இமையத்தின் துல்லியமான சித்தரிப்பு